அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 22 March 2013

வெளிநாடுகளில் அதிக சம்பளம் - பல நபர்களை ஏமாற்றிய மோசடி மன்னன் பற்றிய தகவல் தரவும்! யாழ் பொலிஸ்


22  March  2013   
www.thedipaar.com
வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக கூறி பல லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த நபரை
பொலிஸார் வலைவீசித் தேடிவருகின்றனர். அத்துடன் இவரைக் கண்டால் உடனே பொலிஸாருக்கு

தெரியப்படுத்துமாறும் பொதுமக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

படத்தில் காணப்படும் பிரஸ்தாப நபர் வெளிநாட்டில் உயர் சம்பளத்துடன்
வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்களிடம்
பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளதாக யாழ்.குற்றத்தடுப்பு
பொலிஸ் பொறுப்பதிகாரி விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்

தற்போது நீர்கொழும்பில் வசிக்கும் சிவநாதன் அன்ரன் சியாம் குமார் எனும்
குறித்த நபரே இவ்வாறு ஆறு இளைஞர்களிடமும் பெருந்தொகையான பணத்தை மோசடி செய்து
தற்போது தலைமறைவாகியுள்ளார்.

எனவே இந்நபர் தொடர்பான தகவல்களை அறிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு
உடனடியாக தெரியப்படுத்தும் அதேவேளை, எதிர்காலங்களில் இவ்வாறான ஏமாற்றுக்காரர்கள்
குறித்து விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

தற்போதுள்ள அமைதிச்சூழலை பயன்படுத்தி வெளிநாடுகளில் அதிக சம்பளத்துடன்
வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத் தருவதாக கூறி இளைஞர், யுவதிகளை ஏமாற்றும்
நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப்
பகுதிகளில் வாழும் இளைஞர்கள், யுவதிகளிடமிருந்து பெருந்தொகையான பணத்துடன்
மோசடிக்காரர்கள் தலைமறைவாகும் சூழ்நிலையிலும் காசோலை மோசடிகள் தொடர்பிலும் மக்கள்
விழிப்பாகவும் அவதானமாகவும் இருக்குமாறும் பொதுமக்களை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

thedipaar thanks

No comments:

Post a Comment