அமெரிக்க வெள்ளை மாளிகையில் எச்1பி விசா மீதான புதிய மாற்றங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து 50,000 கோடி ரூபாய் வரை இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் இழந்தன.
: Tuesday, January 31, 2017, அமெரிக்க வெள்ளை மாளிகையில் எச்1பி விசா மீதான புதிய மாற்றங்களுக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து 50,000 கோடி ரூபாய் வரை இந்தியாவின் டாப் 5 ஐடி நிறுவனங்கள் இழந்தன.
நடப்பு எச்1பி விசா விதிகளின் படி ஊழியர்களுக்குக் குறைந்தபட்சம் 60,000 டாலர்கள் வரை ஊதியம் அளிக்க வேண்டும். ஆனால் புதிய விதிகளின் படி 1,30,000 டாலர்கள் சம்பளம் அளிக்கும் நிலைக்கு ஐடி நிறுவனவங்கள் தள்ளப்பட்டுள்ளன.
இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வருவாய் பாதிப்பு
இந்தச் சம்பள உயர்வை அளிக்க இந்திய ஐடி நிறுவனங்களுக்குச் சிரமமாக இருக்கும். எச்1பி விசா மூலமாக அமெரிக்காவிற்கு ஊழியர்களை இந்திய ஐடி நிறுவனங்கள் கொண்டு செல்வதால் 60 சதவீதம் வரை ஏற்றுமதி வருவாய் பெறுகின்றன, இப்போது அந்த வருவாய் குறையும்.
மும்பை பங்குச் சந்தையில் ஐடி நிறுவனங்களின் நிலை
டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.47 சதவீதம் சரிவிலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 2.01 சதவீதம் சரிவிலும், எச்சிஎல் நிறுவனப் பங்குகள் 3.67 சதவீத சரிவிலும், விப்ரோ நிறுவனத்தின் பங்குகள் 1.62 சதவீதமும், டெக் மகேந்திரா நிறுவனத்தின் பங்குகள் 4.23 சதவீதம் சரிந்தும் வர்த்தகம் செய்யப்பட்டன.