பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Tuesday 19 April 2022
Alhamdulillah, my dream of praying behind my son as Imam in a Masjid came true. All praise to Him alone. May Almighty Allah swt make him steadfast in his quran not only on memorizing but in his actions, ameen. All credits goes to my dear wife Jerina Banu for being a great mother of 4, perfect wife and great motivator. Happy BIrthday Je!
Monday 18 April 2022
Tuesday 12 April 2022
கியாம நாளின் முன்னறிவிப்புகள்
*புனித மக்கா ஹரம்ஷரீபின் இமாம் #ஷேக்_ஷுரைம் தனது குத்பா பேருரையில் இருந்து சிதறிய முத்துக்கள்...*
#விலைகள் உயர்ந்து விட்டன.
#பெண்கள் நிர்வாணமாகி விட்டனர்.
#மஸ்ஜித்கள் காலியாகி விட்டன.
#அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் பாழாக்கப்பட்டன.
#திருடர்கள் நியாயம் பேசுகிறார்கள்.
#முஜாஹித்கள் வழிநடத்தலில் அநியாயம் செய்கிறார்கள்.
#விபச்சாரம் ஹலாலாக்கப் பட்டு விட்டது.
#திருமணம் முடிப்பது இயலாத ஒன்றாக மாறி விட்டது.
#பெண்கள் ஆண்களை நிர்வகிப்பவர்களாக மாறி விட்டார்கள்.
#முஸ்லிம்களுடைய பூமிகள் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன.
#ஏழைகள் குடையின்றி மழையில் தவிக்கின்றனர்.
இறுதி நாளின் பெரிய அடையாளங்களில் கொஞ்சம் தான் எஞ்சியியுள்ளது.
எனவே துரிதமாக தௌபா செய்து கொள்ளுங்கள்.
#ஓட்டைப்_பைகளில் தாங்கள் நன்மைகளை நிரப்புவதை தவிர்த்து கொள்ளுங்கள்
அழகாக வுழு செய்கிறீர்கள்.
ஆனால். .....
தண்ணீரை வீண் விரயம் செய்கிறீர்கள்.
"ஓட்டைப் பை"
ஏழைகளுக்கு உதவி செய்கிறீர்கள்
ஆனால்.......
அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்துகிறீர்கள்.
"ஓட்டைப் பை"
இரவில் நின்று வணங்கி பகலில் நோன்பு நோற்று ரப்பை வழிப்படுகிறீர்கள்.
ஆனால்........
குடும்ப உறவை துண்டித்து வாழ்கிறீர்கள்.
"ஓட்டைப் பை"
நோன்பு நோற்று பசி தாகத்தில் பொறுமையோடு இருக்கின்றீர்கள்.
ஆனால். ......
பிறரை ஏசி, திட்டி சபிக்கிறீர்கள்.
"ஓட்டைப் பை"
ஆடையை மறைத்து அபாயாக்களால் போர்த்துகிறீர்கள்.
ஆனால்........
அதையும் தாண்டி நறுமணம் கமழ்கிறது.
"ஓட்டைப் பை"
விருந்தினரை கண்ணியப் படுத்தி உபசரிக்கிறீர்கள்.
ஆனால்.....
அவர்கள் சென்ற பின் அவர்களைப் பற்றி குறை கூறி புறம் பேசுகிறீர்கள்
" ஓட்டைப் பை"
இறுதியாக சொல்கிறேன்
ஓட்டைப் பைகளில் உங்கள் நன்மைகளை நிரப்ப வேண்டாம்.
ஏனெனில், சிரமப்பட்டு அவைகளை சேகரிக்க,மறுபுறத்தால் இலேசாக விழுந்து விடும்.
ரப்பே.......!
எனக்கும்,என் சகோதர்களுக்கும் மன்னிப்பையும்,நேர்வழியையும் தந்தருள்வாயாக......! ஆமீன்!
~ஆச்சரியம்.......~
ஹஜ், உம்றா செய்ய முடியாது.
காரணம் அதன் செலவுகள் அதிகம். ஆனால்
நல்ல கால நிலைகளை தேடி நாட்டுக்குள்ளும், வெளி நாடுகளுக்கும் சுற்றுலா செல்ல முடிகிறது.
உழ்ஹிய்யா கொடுக்க முடியாது.
விலை அதிகம்.
ஆனால்
அதிக விலையுள்ள
ஐ போன், ஆடம்பர பொருட்களை வாங்க முடியும்.
நாளாந்தம் சமூக வலைத்தளங்களில் நூறு செய்திகளை வாசிக்க முடியும்.
ஆனால்
குர்ஆனின் பத்து ஆயத்துக்களை ஓத நேரமில்லை.
*அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானக* 🤲
Monday 11 April 2022
Wednesday 6 April 2022
வழி தவறும் பெண்கள்
*வழி தவறும் பெண்கள்*
சென்னை 5180
கோவை 1224
திருச்சி 1470
மதுரை 2430
சேலம் 740
ஒட்டுமொத்தமாக *20,000 அதிகமான பெண்கள் கடந்த 3 ஆண்டுகளில்* தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெண்கள் மாற்று மத ஆடவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர்...
நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இஸ்லாமிய பெண்களின் மாற்றுமத காதல் கலப்பு திருமணங்கள்..
கீழுள்ள காரணங்கள் தான் இதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது..
1.வளர்ப்பில் குறைபாடு. மார்க்கப் பற்றோடு வளர்க்காதது. இதனால் தான் மார்க்கத்தை துச்சமாக நினைத்து வெளியேறுகிறார்கள்.
2.அதிக செல்லம் கொடுத்து வளர்ப்பது.
3.காஸ்ட்லியான போனை வாங்கி தருவது.
4.வெகுதூர கல்லூரிகளுக்கு படிக்க அனுப்புவது.
5.திருமண வயதை அடைந்தும் மகளின் திருமணத்தை தாமதிப்பது.
6.மகளின் நட்புகளை கண்காணிக்காதது.
7. பொறுப்பின்மை. எங்கெல்லாம் என் பிள்ளை அப்படி செய்யாது என கண்மூடித்தனமாக நம்பும் பெற்றவர்கள் இருக்கிறார்களோ அங்குதான் அதிகமாக நடக்கிறது.
8. நல்ல வசதியான மாப்பிள்ளை அமையாது என பெண்பிள்ளைகள் தாங்களே ஓடி விடுவது.
9. காதல், மோகங்களை உயர்த்திப் பிடிக்கும் சினிமா, டிவி, போன்றவற்றில் மூழ்கியிருப்பது.
இப்படி ஓடிப்போய் நடக்கும் திருமணங்களில் 90% தோல்வியடைந்து பெண்களின் வாழ்க்கை இம்மையிலும் , மறுமையிலும் நாசமாகிறது.இன்னும் குடிகாரன்களிடமும்,RSS, VHP போன்ற இயக்க வெறிப்பிடித்தவர்களிடமும் சிக்கி பல பெண்களின் வாழ்க்கை நாசமாகிறது.
நம் இஸ்லாமிய சகோதரிகளுக்கு ஒரு விழிப்புணர்வு கட்டாயம் தேவை...
அனைவருக்கும் பகிருங்கள்.. அல்லாஹ் போதுமானவன்
.நன்றி ஹபீபா ஷெரீஃப்
துவா
அருமையான *துஆ.* ஒருமுறை முழுவதும் படித்துவிட்டு
*ஆமீன் சொல்லுங்கள்*
{""யா அல்லாஹ்""}
நாங்கள் என்ன
*புண்னியம் செய்தாேம்*
நீ எங்களை முஸ்லீமான
""ஆண் பெண்னுக்கு""
"பிறக்கச் செய்தாய்"!
{""யா அல்லாஹ்""}
நாங்கள் என்ன நன்மை
""செய்தாேம்""
""நீ எங்களை ஊனமில்லாமல்""
"பிறக்கச்செய்தாய்"
"{யா அல்லாஹ்"}
நாங்கள் பாவிகளாக
இருந்தும் " நீ "
*எங்களுக்கு*
"உணவளிக்கிறாய்"
"{யா அல்லாஹ்"}
"நாங்கள் தவறுகள்"
*செய்பவர்களாக*
"இருந்தாலும்"
*நீ எங்கள் மீது இரக்கம்*
"காட்டுகிறாய்"
"இதற்கெல்லாம் மிக
""மேலாக எங்களை""
"நீ "
""நபி முஹம்மத் {ஸல்}
"அவர்களுடைய
"உம்மத்தினராக""
"வாழச்செய்தாய்"
"அதை விட மேலாக"
""எங்களுக்கு"" மறுமையில்"" நீ
""சுவர்க்கத்தை""
தயார் செய்து
"வைத்திறிக்கிறாய்"
"அதை விட மேலாக"
"அதை விட மேலாக"
"" சுவர்க்கத்தில் ""
உன்னை எங்களுடைய
கண்களினால் கானக்
"கூடிய பாக்கியத்தை"
"வைத்திறிக்கிறாய்"
"""அல்லாஹ்""
இதற்கெல்லாம் எங்கள்
"வாழ் நாள் முழுவதும்"
*"நாங்கள் மன்டியிட்டு"*
""சஜ்தாவிளேயே"
கிடந்தாலும் உனக்கு
"நன்றி செலுத்த"
முடியாது {"அல்லாஹ்"}
எங்களை ""உன்""
கருனையினால்
பொறுந்திக்
கொள்வாயாக!!
""""யா அல்லாஹ்"""
*உன்னை அறியாமல்*
வாழும் எங்களது
சகாேதர சகாேதிரிகளுக்கு!!!
*நீ நேர் வழி காட்டுவாயாக!!*
"""ரஹ்மானே""
ஆமீன் ஆமீன் !!
யா அல்லாஹ் ...!
*நபி மூஸாவை காக்க கடலை பிளந்தவனே..!*
தொட்டிலில் குழந்தையாக இருந்த ஈஸா நபியை பேச வைத்தவனே....!
மீனின் வயிற்றில் இருந்த யூனுஸ் நபியை உன் சக்தியால் காப்பாற்றியவனே...!
கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அய்யூப் நபியை உன் கருணையினால் குணப்படுத்தியவனே...!
*என் இரட்சகன..!*
மகத்தான உன்னுடைய பெயரால் கேட்கிறன்..!
*துக்கம் , கவலை , நெருக்கடி , வியாதி , இவை அனைத்தையும் விட்டு என்னை காப்பாற்றுவாயாக*...!
நான் துக்கத்தில் ஆழ்ந்தால் என்னை மகிழ்ச்சியுடையவனாக ஆக்குவாயாக..!
*எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் உன்னை அல்லாமல் மற்றவரிடம் என்னை தள்ளி விடாதே..!*
நிச்சயமாக நீ என்னால் தாங்க முடியாத கஷ்டத்தை கொடுக்க மாட்டாய்...!
என்னை படைத்தவனே.!
என் வாழ்க்கையை உனது கரத்தில் வைத்திருப்பவனே..!
என்னுடைய நற்பாக்கியமும் , துர்பாக்கியமும் உன் கையில் இருக்கின்றன..!
ஏக இறைவா..!
என்னுடைய உள்ளத்தை மகிழ்ச்சி உடையதாக ஆக்குவாயாக.!
இவ்வுலகமே எனக்கு ஒன்று சேர்த்து நன்மை செய்ய நாடினாலும் எனக்கென்று நீ எழுதி வைத்ததை தவிர எந்த நன்மையையும் எனக்கு கிடைக்காது என்று நான் ஈமான் கொண்டுள்ளேன்...!
உலகமெல்லாம் ஒன்று சேர்ந்து எனக்கு துன்பம் இழைக்க முயற்சித்தாலும் எனக்கு எதிராக நீ எழுதிய துன்பம் மட்டுமே என்னை அடையும் என்பதை நான் நம்புகிறேன்....!
ஏக இறைவா..!
என் உள்ளத்தில் நிறைய தேவைகள் இருக்கின்றன.!
உன்னையல்லாமல் வேறு யாரிடமும் அதை சொல்ல முடியாது.. என்னுடைய ரகசியங்களும் என் ஆழ் மனதில் புதைந்து உள்ளவை களையும் நீமட்டுமே அறிவாய்..!
என்னைப் பற்றி யார் தவறாக நினைத்தாலும் , என்னை ஒதுக்கி வைத்தாலும் எனக்கு கவலை இல்லை.. என்னைப் பற்றி என் ரப்பூ நீ அறிவாய் அது போதும்....!
" குன் " ஆகுக என்று சொன்னால் அனைத்தும் ஆகிவிடும் என்று சொன்னவனே ....!
என்னுடைய விருப்பங்களை நோக்கி ( குன் ) "ஆகிவிடு" என்று சொல்வாயாக...!
நீ என்னுடன் இருப்பதால் எனக்கு யாரிடமும் எந்த தேவையும் இல்லை..!
*எனக்கு நீ வழி காட்டு* ,
என்னுடைய காரியங்களை நீ திட்டமிட்டு நிறைவேற்று..!
நான் தவறான வழியில் செல்லும் போது என்னை நேரான வழியில் திருப்பி விடு...!
வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கு கட்டுப்பட்டவனாக வாழ்ந்து மரணிக்கின்ற பொழுதும் உனக்கு கட்டுப்பட்டவனாக மரணிக்கின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக...!
யா அல்லாஹ்..!
எங்கள் பாவங்களை மன்னித்து விடு..!
யா அல்லாஹ்..!
நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து விடு..!
*யா அல்லாஹ்..!*
கப்ருடைய வேதனையிலிருந்து நரக நெருப்பிலிருந்தும் எங்களை பாதுகாப்பாயாக..!
யா அல்லாஹ்..!
இம்மையிலும்
மறுமையிலும்
வெற்றியை
தருவாயாக..!
இறைவா..!
சிறிய பெரிய எல்லா நோய்களை விட்டு எங்களை வாழச்செய்வாயாக..!
இறைவா..!
*இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக..!*
இறைவா...!
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பிய வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக..!
இறைவா..!
*பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக...!*
இறைவா..!
மறுமை நாளில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல
்லம் அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாத...!
இறைவா..!
உன்னுடைய பிரியத்தையும் எங்களுடைய உள்ளங்களில் நிலைத்திருக்கச் செய்வாயாக..!
*இறைவா..!*
மரண வேதனை , மண்ணரை வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக..!
இறைவா..!
முன்கர் நக்கீர் உடைய கேள்வி கணக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக...!
இறைவா..!
கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக...!
*இறைவா...!*
ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழைய செய்வாயாக..!
*இறைவா..!*
கியாமத் நாளில் வெப்பத்தை விட்டும் , நரக நெருப்பை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக...!
இறைவா..!
கியாமத் நாளில் இழிவுகளை விட்டும் எங்களை மூஃமீனான ஆண் , பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக...!
*இறைவா..!*
எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுப்பாயாக...!
இறைவா...!
கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயாக....!
இறைவா...!
ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கச் செய்வாயாக....!
இறைவா..!
உன்னுடைய அருளை கொண்டு எங்களுடைய அனைத்து பாவத்தையும் மன்னித்து எங்களை சொர்க்கத்தில் நுழைய செய்வாயாக....!
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.....!
*யா அல்லாஹ்*
எங்களது தாய் தந்தையர்களின் பாவங்களை மன்னிப்பாயாக.......!!!
*யா அல்லாஹ்*
எங்களது கணவன்,
மனைவி ,குழந்தைகள்,
சகோதர,சகோதரிகள்,
உற்றார் உறவினர்கள் ,
*உலக முஃமின்கள் அனைவரின் பாவங்களையும் மன்னிப்பாயாக........!*!!
*யா அல்லாஹ்*
நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ,
அறிந்தோ அறியாமலோ,
வேண்டுமென்றோ,
திட்டமிட்டோ,
மறைமுகமாகவோ,
வெளிப்படையாகவோ,
ரகசியமாகவோ,
பகிரங்கமாகவோ,
*சிறிதோ பெரிதோ,*
எப்பேற்பட்ட பாவங்களையும் உனது கருணை பார்வையால் மன்னித்து
மேலும் பாவங்கள் செய்யாதவாறு எங்கள் நஃப்ஸை பாதுகாப்பாயாக
*மறுமை நாளில்* எங்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக........!!!
*யா அல்லாஹ்*
உள்ளங்களை புரட்டக் கூடியவனே எங்கள் உள்ளங்களை உன் மீது திருப்புவாயாக
கண் இமைக்கும் நொடிப் பொழுதில் கூட எங்களை விட்டு பிரிந்து
எங்களை தனிமைப்படுத்தி விடாதே........!!!
*யா அல்லாஹ்*
*நாங்கள் கேட்பதற்கு முன்பாக*
எங்கள் தேவைகளை நிறைவேற்றுவாயாக......!!!
*யா அல்லாஹ்*
யாரெல்லாம் எங்களிடம் துஆ செய்ய கோரினார்களோ அவர்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக......!!!
*யா அல்லாஹ்*
எங்களது சொல்லாலோ
செயலாலோ
பிறர் மனதை கஷ்டம் கொடுத்திருந்தால்
அதற்கு பகரமாக அவை அனைத்தையும் அவர்களுக்கு நன்மைகளாக்கி தருவாயாக.......!!!
*யா அல்லாஹ்*
*எங்களது உறவுகளை கொண்டோ*
*செல்வத்தை கொண்டோ*
எங்களை சோதித்து விடாதே........!!!
*யா அல்லாஹ்*
உலக முஃமின்கள் அனைவரையும் முடிவு நாள் வரை பாதுகாப்பாயாக
உனது மகத்துவம் தெரியாத மாற்று மத சகோதர , சகோதரிகளுக்கு நேரான ஹிதாயத் வழங்குவாயாக.......!!!
*யா அல்லாஹ்*
எங்களுக்கும்,
எங்களுடன் இருப்பவர்களுக்கும் பரக்கத் செய்வாயாக
நாங்கள் செல்லுமிடம் எங்கும் வெற்றியை தந்து
எங்களது எதிரிகளை தோற்கடிப்பாயாக.....!!!
*யா அல்லாஹ்*
எங்களை அனைத்து வித கஷ்டங்களில் இருந்தும்,
வேதனையிலிருந்தும்,
விபத்துகளிலிருந்தும்,
விஷஜந்துக்களிலிருந்தும்,
அபாயங்களிலிருந்தும்,
இயற்கை சீரழிவிளிருந்தும்,
ஜின் மற்றும் ஷைத்தானின் கெட்ட ஊசலாட்டங்களிலிருந்தும்,
வறுமையிலிருந்தும்,
கடனிலிருந்தும்,
பலாய் முஸீபத்துகளிலிருந்தும்,
எதிர்பாராத மரணத்திலிருந்தும்,
கண் திருஷ்டியிலிருந்தும்,
எங்களை பாதுகாப்பாயாக...!!!
*யா அல்லாஹ்*
எங்களது
*உணவும்,உடையும்,இருப்பிடமும் ஹலாலானவையாக தருவாயாக*
எங்களை உனக்கு நெருக்கமானவர்களாக,
உனக்கு பிரியமானவர்களாக
மாற்றுவாயாக
மார்க்கத்திற்காக உயிரை இழக்கும் அளவுக்கு துணிவையும்,
*மரணத் தருவாயில் கலிமாவை மொழியும் பாக்கியத்தையும் தருவாயாக.........!!!*
*யா அல்லாஹ்*
உலக முஃமின்கள் அனைவரையும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்து பாதுகாப்பாயாக...!!!
*யா அல்லாஹ்*
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நெருக்கத்தையும்
எங்களுக்கு மறுமையில் வழங்குவாயாக.......!!!
*யா அல்லாஹ்*
எங்களை கப்ரின் அதாபிலிருந்தும்,
நரக நெருப்பில் இருந்தும்
பாதுகாத்து
மறுமையில் *ஜன்னத்துல் ஃபிர்தௌஸ்* எனும்
மேன்மையான சுவர்க்கத்தை எங்களுக்கு வழங்குவாயாக......!!!
எங்களது ஹலாலான துஆக்களை கபூல் செய்வாயாக...!!!! *ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்*
💞💞💞💞💞💞
Don't miss ifthar dua
🕋🕌🕌🕌🕋
ஒரு தடவை மூஸா அலை அல்லாஹ்விடம் கேட்டார்; யா அல்லாஹ்! நீ என்னை உன்னுடன் நேரடியாக பேசவைப்பதன் மூலம் கெளரவப்படுத்தினாய்..இது போன்ற பாக்கியத்தை வேறு எவருக்கேனும் கொடுத்ததுண்டா? என கேட்டார்.அதற்கு அல்லாஹு தஆலா ; மூஸாவே! இறுதி காலப்பகுதியில் நான் முஹம்மத் (ஸல்) இன் கூட்டத்தினரை அனுப்புவேன்.அவர்கள் காய்ந்த உதடுகளுடனும்; வரண்ட நாவுடனும், மெலிந்து கண்கள் குழிவிழுந்த தோற்றத்துடனும் இருப்பதோடு; வயிற்றில் பசியுடன் -என்னை அழைப்பர்(துஆ மூலம்).அவர்கள் தான் அதிகம் அதிகம் எனக்கு நெருக்கமானவர்கள். மூஸாவே! உங்களுக்கும் எனக்கும் மத்தியில் 70000 தடுப்புக்கள் இருந்தன. ..ஆயினும் இஃப்தார் நேரத்தில் எந்த ஒரு தடுப்பும் எனக்கும் நபி முஹம்மதின் உம்மத்திற்கும் இருக்காது.மூஸாவே! இஃப்தார் நேரத்தில் நோன்பாளியின் துஆ நிராகரிக்கப்படாது .அதற்கான பொருப்பை நானே ஏற்கிறேன்.என்றான்..
ஸூப்ஹானல்லாஹ்!!
இந்த ஹதீஸை அதிகம் அதிகம் பகிரவும்..
தயவு செய்து மகத்துவம் மிக்க கண்ணியப்படுத்தப்பட்ட
நோன்பு திறக்கும் நேரத்தை வீணாக கழிக்காமல் இறைவனி்ன் பொருத்தம் அடைவீர்..
🤲🤲🤲🤲
Subscribe to:
Posts (Atom)