PUDUVALASAI .NET
பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Sunday 12 May 2024
Saturday 11 May 2024
Saturday 4 May 2024
Sunday 21 April 2024
Friday 12 April 2024
எங்களது ஊரில் கால் பந்து பெருமை சேர்த்த 💐💐💐💐💐💐
புதுவலசையில் ஒவ்வொரு சீசனில் ஒரு விளையாட்டு களைகட்டும் அதே போல் கால்பந்தும்.
பொதுவாக நமதூர் மக்கள் கால்பந்து நன்றாக விளையாடும் திறமை உள்ளவர்கள். அதுவும் 80' களின் கடைசி ஒரு பொற்காலம் என்று சொல்லலாம் கால்பந்து மீது ஆர்வம் இருந்தாலும் அதை மேலும் அதிகமாகியது என்றால் அது "ஷேக் அமானுதீன் அண்ணன்," காரணம் அவர்கள் ஆடும் முறை.
"மலேசியாவில் இருந்து அவர்கள் ஊருக்கு வந்தாலே கிரவுண்ட் களைகட்டும்" 4:45 க்கு மைதானத்தில் இருந்தால் மட்டுமே விளையாட முடியும் அதன் பின் வந்தால் விளையாடும் அணியில் இடம் கிடைக்காது. அவருடன் விளையாட எல்லோருக்கும் ஆசை இருக்கும் அது பல வீரர்களை அடையாளம் காண உதவியது.
"இன்று மெஸ்ஸி,ரெனால்டினோ என்று நாம் வியர்ந்து பாருக்கும் வீரர்கள் போல் அவர் விளையாடும் முறையும் தனியாக தெரியும்." அவரி வேகத்திற்கு யாராலும் ஓட முடியாது அந்த வேகம் பலரையும் ஈர்த்தது, விளையாடுவது மட்டும் அல்ல பந்தை எவ்வாறு நெஞ்சில் வாங்க வேண்டும் பந்தை வேகமாக அடிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அவரிடம் இருந்து கற்றவர்கள் அதிகம்.
விளையாட ஊரே திரண்டு வெளியூர் போவதும் மற்ற ஊர் அணிகள் ஊரில் விளையாட வருவதும் கால்பந்து திருவிழா.
அவர் விளையாடுவது அழகாக, நேர்த்தியாக இருக்கும். அதை விரும்பாதவர்கள் யாரும் இல்லை அந்த கால கட்டத்தில் அவர்களோடு விளையாடியவர்களுக்கு அதை ரசித்தவர்களுக்கு இந்த கருத்தில் மாற்று கருத்து இருக்காது.
"அந்த காலகட்டத்தில் கால்பந்து விளையாடுபவர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேசன்." புதுவலசையின் கிரேட் கால்பந்து வீரர் அண்ணன் ஷேக் அமானுதீன் அவர்கள்.
Tuesday 31 October 2023
படித்ததில் பிடித்தவை
நான் படித்ததில் பிடித்தது மற்றும் ரசித்தது...
என் மனைவி )...
ஆழ்ந்த உறக்கத்தில் அமைதியாக உறங்கும் என் மனைவியை சற்று அமைதியாகக் கூர்ந்துப் பார்க்கிறேன்...
இத்தனை வருட வாழ்வில் அவள் ஆசைகள் என்ன என்பதைக் கூட அறியாத ஆண்மகனாக நான்... இருப்பதை நினைத்து முதன் முதலாக என்னையே வெறுக்கிறேன்...
என் கையைப் பற்றி என்னோடு வாழ வருகையில் அவள் ஒரு வளர்ந்தக் குழந்தையாகவே எனக்குத் தெரிந்தாள்..
விட்டு வைத்தேனா? இளமையின் மிடுக்கில்
தடுக்கி விழுந்த இரவுகளில் முனகல்களோடு என்னை அணைத்துக் கொள்வாள்...
வாலிபத்தின் திமிரில் அவளின் வலிகளை உணர்ந்ததில்லை நான்...
எப்பொழுது பசித்தாலும் உணவு தயார் பண்ணி என்னை உபசரித்து மகிழும் அவளின் பசி அறியாமலே புசித்திருக்கிறேன்...
கோபங்கள் எழும் போதெல்லாம் வார்த்தைகளால் வைதிருக்கிறேன்...
திருப்பி ஒரு நாளேனும் என்னைத் திட்டியதில்லை அவள்...
திட்டி இருந்தால் திருந்தியிருப்பேனோ..
ஏனடி எல்லா வலிகளையும்
உனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாய்...
மெதுவாக அவள் கைகளை எடுத்து
என் கண்ணில் ஒற்றிக் கொள்கிறேன்..
கரடு முரடான அவள் கைகளின் கீறலில் என் கண்களில் நீர் வலிக்கிறது கைப்பட்டதால் அல்ல.. .
மென்மையான அவள் கைகள் இன்று கரடு முரடான காரணம் நினைத்து...
எங்கே இருந்தேன் இத்தனை நாளும்
என்னருகிலேயே இருந்தவளை இத்தனை நாளும் எப்படித் தொலைத்திருத்தேன்...
பாவியம்மா நான் பருவ வயதுகளில் உன்னைத் தூங்க விடவில்லை நான் பின் நான் பெற்றதுகளும்
உன் நாத்தனார்களும்...
செல்வமே அத்தனைச் சொத்துக்கள் சேர்த்த எனக்கு... எனக்குக் கிடைத்த சொத்து உன்னைப் பாதுகாக்க மட்டும் எப்படி மறந்தேன்...
இத்தனை வருடமும் உன் நிழல் கொண்டு குடும்பம் காத்தவள் நீ நாங்கள் அத்தனை பேரிருந்தும்
உனக்குள் அனாதைப் போல வாழ்ந்தவள் நீ
எப்படி மறந்தேன் உன்னை...
நானில்லாத போதும்
நீ தைரியமாக கடந்து விடுவாய்
உன் இறுதி நாட்களை
நீயில்லாமல் என் வாழ்க்கை
நினைத்தும் பார்க்க முடியவில்லை
என்னால்...
தீர்க்கச் சுமங்கலியாகி
நீ முந்திக் கொண்டால்
ஊரே போற்றும் உன்னை...
உன்னைத் தொலைத்து விட்டு
நானிருந்தாலோ
ஏறெடுத்தும் பாரார் என்னை
நீ இருக்கும் வரையில் தான்
என் திமிரெல்லாம்...
நான் சத்தியமாகச் சொல்கிறேன்
நீ மட்டும் போதுமடி எனக்கு
உன்னை விட எதுவும்
என்னை ஈர்க்காது இனிமேல்..
சாகும் வரையில் உன் காலடி போதும்
உன் மார்போடு என்னை அணைத்து ஒரு தாலாட்டு போதும்...
கதையின் நீதி :-
வெறும் உடலால் இணைபவர்கள்
கணவன் மனைவி அல்ல...
ஆத்மார்த்தமாக அன்பான உள்ளத்தால் இணைபவர்கள் தான் உண்மையான கணவன் மனைவி
இந்த பதிவு பேஸ்புக்கில் எடுத்தவை
Thursday 26 October 2023
*பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு**தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிய ஒன்றிய பொது மக்களாகிய உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..**1) வீடு கட்டும் போது முறையாக பிளான் வாங்கியும் அல்லது ஆல்டிரேசன் செய்யும் போது மாமுல் கேட்பதும்.* *2) புதிய குடிநீர் / கழிவுநீர் இணைப்புக்கு மாமுல் கேட்பதும்.**3) பிளாட்பாரம் கடைகளில் மாமுல் கேட்பதும்.* *4) வீடுகளைக் காலி செய்ய ரவுடிகளை அனுப்புவதும்.**5) கட்ட பஞ்சாயத்து செய்து பணம் கேட்பதும்.**இது போன்ற குற்ற செயலில் ஈடுபடும் அதிகாரிகள், வார்டு கவுன்சிலர்கள், அவர்களது கணவர்கள் , அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் மாமுல் கேட்டால் அல்லது தொந்தரவு கொடுத்தால் உடனடியாக கீழ்கண்ட எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் யாருக்கும் பயப்பட தேவையில்லை..**முதலமைச்சர் தனி பிரிவு - எண்* 044 25672345, 044 25672283*முதலமைச்சர் - எண்*+91 9443146857*தொலைநகல் - எண்*044 25670930, 044 25671441*பொது மக்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் பகிரவும்.*
Subscribe to:
Posts (Atom)