ஆனால்
அதே நேரத்தில் எகிப்தில் சூயல் கால்வாய் பகுதியில் உள்ள போர்ட் நகரில் கலவரம்
வெடித்தது. அப்போது, கலவரக் காரர்கள் சுமார் 500 பேர் அங்குள்ள போலீஸ் நிலையத்தை
முற்றுகையிட்டனர். பின்னர் அதன் மீது கல்வீசி தாக்கினார்கள். பெட்ரோல்
குண்டுகளையும் வீசினார்கள். இதனால் போலீஸ் நிலையம் தீப்பிடித்து எரிந்தது. தகவல்
அறிந்து அங்கு தீயை அணைக்க சென்ற தீயணைப்பு வாகனத்தை செல்ல விடாமல் தடுத்து
நிறுத்தினர்.
தகவல்
அறிந்ததும் போலீசார் அங்கு சென்று போராட்டக்கார்களை கலைத்தனர். இச்சம்பவத்தில்
எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதற்கிடையே, எகிப்து சென்றுள்ள அமெரிக்க
வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி அந்நாட்டு அதிபர் முகமது முர்சி, அரசியல் கட்சி
தலைவர்கள், வர்த்தகர்கள், மற்றும் சமூக நல ஆர்வலர்களை சந்திக்கிறார்.
ஆனால்
இவரை முக்கிய எதிர்கட்சி தலைவர்களான முகமது எல்பராடி, ஹம்தீம் ஷபாய் ஆகியோர்
சந்திக்க மறுத்து விட்டனர். வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை
புறக்கணிக்க இவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், அதை மறு பரிசீலனை செய்யும்படி
அவர்களை அமெரிக்கா கேட்டு கொண்டுள்ளது. அதனால் அவரை அவர்கள் சந்திக்கவில்லை.
போராட்டத்துக்கு
பிறகு நடந்த பொது தேர்தலில் முகமது முர்சி எகிப்தின் புதிய அதிபராக பொறுப்பு
ஏற்றார். கடந்த நவம்பர் மாதம் தனக்கு முழு அதிகாரத்தையும் அவர் மாற்றி கொண்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவ்வப் போது கலவரங்கள் நடக்கின்றன. அது
போன்றுதான் தற்போது போர்ட் நகரில் கலவரம் நடந்துள்ளது.
News
: Source
eutamilar thanks
No comments:
Post a Comment