March 24, 2013 08:42 am
ஆப்பிரிக்க நாடான மாலியில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை நடைமுறை
படுத்தக்கோரி இஸ்லாமிக் மிக்ரெப் என்ற இயக்கம் அரசுக்கு எதிராக செயல்பட்டு
வருகிறது.
அல்
கொய்தா அமைப்புடன் தொடர்புடைய இந்த இயக்கம் நாட்டின் வடக்கு பகுதியில்
பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தெற்கு நோக்கி முன்னேறி வந்தது.
இந்நிலையில் பிரான்சு அரசு, மாலி
இராணுவத்தினருக்கு ஆதரவாக அங்கு சண்டையிட்டது. இதனால் தீவிரவாதிகள் அனைவரும்
இஃபோகாஸ் மலைப்பகுதிக்கு விரட்டப்பட்டனர்.
பின்னர்
சாட் நாட்டு இராணுவத்தினரின் துணையுடன் பிரான்ஸ் இராணுவம் அந்த தீவிரவாதிகளுக்கு
எதிராக அங்கு தீவிர சண்டையில் இறங்கியது.
அப்போது
சாட் இராணுவத்தினரிடம்,
நடந்த சண்டையில் அப்துல்ஹமீத் அபூ ஜீத் கொல்லப்பட்டதாக
அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த தகவலை தற்போது பிரான்ஸ் ஜனாபதிபதி ஒலாந்த்
உறுதிப்படுத்தியுள்ளார்.
அல்ஜீரியா நாட்டை சேர்ந்த கமாண்டர் அபூ ஜீத், பல
மேற்கத்தியர்களை கடத்தி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய
குற்றவாளி என்று கூறப்படுகிறது
thamilan. thanks
No comments:
Post a Comment