அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 16 May 2013

சென்னையில் 7 புதிய தாலுகாக்கள் : தமிழக முதல்வர் அறிவிப்பு!



சென்னையில் மேலும் புதிதாக 7 தாலுகாக்களை, தமிழக அரசு விரிவு படுத்தி அறிவித்துள்ளது. நேற்று சட்டப்பேரவையில் இதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.

சென்னை மாவட்டத்தில் புரசைவாக்கம், அயனாவரம், அமைந்த கரை, வேளச்சேரி, கிண்டி, ஆகிய 5 இடங்களிலும், திருவள்ளூர்  மாவட்டத்தில் திருவொற்றியூர், மதுரவயல் ஆகிய இடங்களில் புதிய தாலுக்கா அமைக்கப்படும் என்று, பேரவையில் நேற்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, புதிதாக அமையவுள்ள  தாலுக்கா  விவரமானது, கோட்டை-தண்டையார் பேட்டை தாலுகாவைப் பிரித்து புரசை வாக்கத்தில் புதிய தாலுகா. அடுத்து புரசைவாக்கம்-பெரம்பூர் தாலுக்காவை பிரித்து அயனாவரத்தில் புதிய தாலுக்கா.

எழும்பூர்-நுங்கம்பாகத்தை பிரித்து அமைந்த கரையில் புதிய தாலுக்கா. மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி தாலுக்காவைப் பிரித்து வேளச்சேரியில் புதிய தாலுக்கா. மாம்பலம் -கிண்டி தாலுக்காவைப் பிரித்து கிண்டியில் புதிய தாலுக்கா. மாதவரம் தாலுக்காவைப் பிரித்து திருவொற்றியூரில் புதிய தாலுக்கா. அம்பத்தூர் தாலுகாவைப் பிரித்து மதுரவயலில் புதிய தாலுக்கா என்று  தமிழக அரசின் செய்தி குறிப்பில் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4tamilmedia thanks

No comments:

Post a Comment