ஈரானில் இன்று ஜனாதிபதி தேர்தல் நடந்து கொண்டிருக்கும் அதேவேளை அந்நாட்டு மக்கள் தங்கள் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்க தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
ஈரான் நாட்டின் நேரப்படி இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவானது மாலை 6 மணி வரை பெறவிருக்கின்றது. இந் நாட்டில் ஜனாதிபதி பதவிக்கு இன்று 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இத் தேர்தலில் 50.1 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாக்கு பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார், மற்றும் எந்த வேட்பாளரும் இந்த அளவு வாக்குகளை பெறாத பட்சத்தில், இரண்டாம் முறை வாக்கு பதிவு நடைபெறும்.
இன்று நடைபெறும் ஓட்டுப் பதிவின் முடிவுகள் நாளை (சனிக்கிழமை) வெளியாகும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது.
இந் நாட்டில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான தேர்தலும் இன்று நடைபெறுகிறது.
ஈரான் ஜனாதிபதி முகமத் அகமதி நிஜாத், தற்போது இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவியை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment