
ஃபேஸ்புக் நிறுவனம் தனது புதிய தகவல் பரிமாற்ற மையத்தை ஸ்வீடன் நாட்டில் திறந்துள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே ஃபேஸ்புக் அமைக்கும், முதல் தகவல் பரிமாற்ற மையம் இது.
ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை அமெரிக்க அரசு கண்காணிப்பதாக வெளியான தகவல், உலகளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. ஐரோப்பாவில் 35 கோடி பேர் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் நிலையில், அவர்களின் தகவல் பரிமாற்றத்தை இந்த மையம் நிர்வகிக்கும்.
ஸ்வீடன் நாட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இந்த மையம் செயல்படும் என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம், இதுவரை 35 ஆயிரம் கோடி படங்களை சேமித்து வைத்துள்ளதாகவும், தினமும் புதிதாக 35 கோடி படங்கள் சேர்வதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.v
berunews.wordpress thanks
No comments:
Post a Comment