பக்கங்கள்
- முகப்பு
- PUDUVALASAI<>PHOTOS
- ARABI OLIYULLAH SCHOOLS, PUDUVALASAI
- puduvalasaivdio.
- Quran Tamil m-3
- KOVAI AYUB<>CMN SALEEM
- சிறப்பு தாஃவா தர்பியா நிகழ்ச்சி வீடியோ:
- எச்சரிக்கை! அந்தரங்கத்தை படம்பிடிக்கும் கமெராக்கள் இப்படியும் இருக்கலாம்!
- அருமையானபாடல்
- சமையல்
- முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
- பயனுள்ள இணையதள முகவரிகள்
- ஆன்லைன் சேவைகள்
Tuesday, 9 July 2013
கிராமப் புறங்களில் சட்டம்,ஒழுங்கு பிரச்னைகளை கண்டறிய பிஎல்ஓக்கள் நியமனம்
ராமநாதபுரம்: கிராமப் புறங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை முன்கூட்டியே கண்டறிய வசதியாக, சிறப்பு எஸ்.ஐ.,க்கள் பஞ்சாயத்து நல்லுறவு அதிகாரிகளாக(பி.எல்.ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் வேறு எந்த பணிகளிலும் ஈடுபட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 429 பஞ்சாயத்துகள் உள்ளன. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் எல்கையிலும் சுமார் 10 பஞ்சாயத்துகள் வரை உள்ளன. இதில் சட்டம், ஒழுங்கு தொடர்பான தகவல்களை சேகரிக்கும் பொருட்டு, ஒரு போலீஸ் ஸ்டேஷனிற்கு தலா ஒரு சிறப்பு எஸ்.ஐ. வீதம், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் பஞ்சாயத்து நல்லுறவு அதிகாரி(பி.எல்.ஓ) நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பஞ்சாயத்துகளில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள், வி.ஏ.ஓ.க்கள், தலையாரிகளை தொடர்பு கொண்டு, அவர்களிடம் இருந்து கிராமங்களில் சட்டம் ஒழுங்கு சம்பந்தமான தகவல்களை உடனுக்குடன் பெறுவர். அந்த தகவல்களை சம்பந்தப்பட்ட ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் மூலம் எஸ்.பி.யின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்வதே பி.எல்.ஓ.க்களின் பணியாகும். இந்த பி.எல்.ஓ.க்கள் ஸ்டேஷன்களில் வேறு எந்த பணிகளி லும் ஈடுபட மாட்டார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment