அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 7 January 2026

திரைப்படங்கள் குறித்து உரையாடுவது அல்லது பார்ப்பது நேர விரயம் என்ற விசித்திர உலகில் வாழும் ஜந்துகளில் நானும் ஒருவன். ஆனால் அந்த திரைதுறை ஆதிக்கம் செலுத்தாத வாழ்வியல் நகர்வுகளே இல்லை எனும் அளவிற்கு இன்றைய களம் (காலம்) கட்டமைக்கப்பட்டுவிட்டது. காட்சிப்படுத்தப்படும் உரையாடல்களும், உள்ள குமுறல்களும், உளவியல் தாக்கங்களும், கதா நாயகன்/நாயகி என்ற என்ன ஓட்டமும், காதல், காமம், வன்முறை, வெறியாட்டம், நல்லுபதேசம், பிரிவினைவாதம் என ஒரு மனிதனின் வாழ்வியலில் இன்றைய சினிமாக்கள் பின்னி பினைந்து விட்டதாகவே கருதுகின்றேன். இந்த உளவியல் கொண்ட சமூகத்தில் எதை காட்ச்சிப்படுத்துகின்றோம் என்பது மிக மிக அவசியம். ஒரு நான்கு சிறுவர்கள் சேர்ந்து ஒரு இளைஞனை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கொடும் ஆயுதம் கொண்டு தாக்குகின்றார்கள், அதை வீடியோவாக பதிவு செய்து கொள்கின்றார்கள், அதில் ஒருவன் மச்சான் அருவாளை தா! நான் வெட்டுகின்றேன் என்கிறான். பார்க்கவே மனம் கனக்கின்றது. இது போன்ற மனிதம் மறித்த மனப்போக்கு போதை பழக்கங்களால் மட்டும் வந்துவிடுவதில்லை. இது ஒரு தொடர் கட்டமைக்கப்பட்ட உளவியல் சிதைவு. எதை காண்கின்றானோ? அதுவாக மாற நினைக்கும் நிகழ்வு. அதற்கு பல காரணங்கள் உண்டு! போதை பழக்கம், வயது, பெற்றோரின் வளர்ப்பு, சுற்றத்தின் சூழல், நண்பர்களின் மனோபாவம், வழி நடத்த நல்ல தலைமையின்மை, இன்னும் பல!.இவை அனைத்தையும் காட்ச்சிப்படுத்தும் திரைதுறை ஜாம்பவான்கள் தங்கள் படைப்பை மிக நுணுக்கமாக கையாள வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றீர்கள். சமீபத்திய பெரும் வெற்றிபடங்கள் எல்லாம் வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதோடு நின்றுவிடாமல், அதையும் தாண்டி குடும்ப உறவுகள் மீதான நம்பிக்கையை சிதைக்கும் விதமாக கதைகளம் அமைக்கப்ப்டுவது இது போன்ற வெறித்தனங்கள் அதிகரிக்க காரணங்களாக இருக்க கூடும்.மாபெரும் கதாநாயகர்கள் நடித்த, பெரும் வெற்றி இயக்குணர்கள் இயக்கிய படங்களை கூர்ந்து கவணிக்கும் போது, 1. பணத்தாசையால் தந்தையை கொள்ள வில்லனுடன் சேர்ந்து சதி செய்யும் மகன். அதை அறிந்து மகனென்றும் பாராமல் மகனை கொல்லும் தந்தை. 2. மற்றொரு படத்தில் தந்தையை பழிவாங்க மகனை தயார்படுத்திய வில்லன். தன் தந்தை என்று அறிந்த பின்னும் பழிவாங்க துடிக்கும் மகன். இறுதியில் ஆரவார கொண்டாட்டத்துடன் மகனை கொல்லும் தந்தை. 3. தனது வாழ்க்கையை தனது தங்கை தம்பிகளுக்காக அர்பணித்த அண்ணன். இறுதியில் அண்ணனை கொல்ல துடிக்கும் இரண்டு தம்பிகள். தங்கை கற்பழிக்கட்டு கொடூரத்தை அனுபவித்தால் என்று தெரிந்தும் வில்லனுடன் சேர்ந்து அண்ணனை அழிக்க துணிந்த தம்பிகளை; இறுதியில் கொடூரமாக கொல்லும் அண்ணன். இது போன்ற உளவியலை சிதைத்து; நுணுக்கமாக இயல்பியலை மாற்ற துடிக்கும் கோடூர காட்சிகளை காணும் உள்ளம்; எதை நோக்கி நகரும் என்பது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.இன்றைய சினிமாக்களை கவனமாக கையாள வேண்டியது காலத்தின் கட்டாயம். அது சமூக நீதி பேசும் இயக்குணர்களின் கடமை. கொடூரங்களை இலகுவாக்கிவிட்டு சமூக முன்னேற்றம் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை!!வலசை பைசல்

திரைப்படங்கள் குறித்து உரையாடுவது அல்லது பார்ப்பது நேர விரயம் என்ற விசித்திர உலகில் வாழும் ஜந்துகளில் நானும் ஒருவன். ஆனால் அந்த திரைதுறை ஆதிக்கம் செலுத்தாத வாழ்வியல் நகர்வுகளே இல்லை எனும் அளவிற்கு இன்றைய களம் (காலம்) கட்டமைக்கப்பட்டுவிட்டது. 

காட்சிப்படுத்தப்படும் உரையாடல்களும், உள்ள குமுறல்களும், உளவியல் தாக்கங்களும், கதா நாயகன்/நாயகி என்ற என்ன ஓட்டமும், காதல், காமம், வன்முறை, வெறியாட்டம், நல்லுபதேசம், பிரிவினைவாதம் என ஒரு மனிதனின் வாழ்வியலில் இன்றைய சினிமாக்கள் பின்னி பினைந்து விட்டதாகவே கருதுகின்றேன். 

இந்த உளவியல் கொண்ட சமூகத்தில் எதை காட்ச்சிப்படுத்துகின்றோம் என்பது மிக மிக அவசியம். ஒரு நான்கு சிறுவர்கள் சேர்ந்து ஒரு இளைஞனை எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கொடும் ஆயுதம் கொண்டு தாக்குகின்றார்கள், அதை வீடியோவாக பதிவு செய்து கொள்கின்றார்கள், அதில் ஒருவன் மச்சான் அருவாளை தா! நான் வெட்டுகின்றேன் என்கிறான். பார்க்கவே மனம் கனக்கின்றது. இது போன்ற மனிதம் மறித்த மனப்போக்கு போதை பழக்கங்களால் மட்டும் வந்துவிடுவதில்லை. இது ஒரு தொடர் கட்டமைக்கப்பட்ட உளவியல் சிதைவு. எதை காண்கின்றானோ? அதுவாக மாற நினைக்கும் நிகழ்வு. 

அதற்கு பல காரணங்கள் உண்டு! போதை பழக்கம், வயது, பெற்றோரின் வளர்ப்பு, சுற்றத்தின் சூழல், நண்பர்களின் மனோபாவம், வழி நடத்த நல்ல தலைமையின்மை, இன்னும் பல!.

இவை அனைத்தையும் காட்ச்சிப்படுத்தும் திரைதுறை ஜாம்பவான்கள் தங்கள் படைப்பை மிக நுணுக்கமாக கையாள வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றீர்கள். சமீபத்திய பெரும் வெற்றிபடங்கள் எல்லாம் வன்முறை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதோடு நின்றுவிடாமல், அதையும் தாண்டி குடும்ப உறவுகள் மீதான நம்பிக்கையை சிதைக்கும் விதமாக கதைகளம் அமைக்கப்ப்டுவது இது போன்ற வெறித்தனங்கள் அதிகரிக்க காரணங்களாக இருக்க கூடும்.

மாபெரும் கதாநாயகர்கள் நடித்த, பெரும் வெற்றி இயக்குணர்கள் இயக்கிய படங்களை கூர்ந்து கவணிக்கும் போது, 

1. பணத்தாசையால் தந்தையை கொள்ள வில்லனுடன் சேர்ந்து சதி செய்யும் மகன். அதை அறிந்து மகனென்றும் பாராமல் மகனை கொல்லும் தந்தை. 

2. மற்றொரு படத்தில் தந்தையை பழிவாங்க மகனை தயார்படுத்திய வில்லன். தன் தந்தை என்று அறிந்த பின்னும் பழிவாங்க துடிக்கும் மகன். இறுதியில் ஆரவார கொண்டாட்டத்துடன் மகனை கொல்லும் தந்தை. 

3. தனது வாழ்க்கையை தனது தங்கை தம்பிகளுக்காக அர்பணித்த அண்ணன். இறுதியில் அண்ணனை கொல்ல துடிக்கும் இரண்டு தம்பிகள். தங்கை கற்பழிக்கட்டு கொடூரத்தை அனுபவித்தால் என்று தெரிந்தும் வில்லனுடன் சேர்ந்து அண்ணனை அழிக்க துணிந்த தம்பிகளை; இறுதியில் கொடூரமாக கொல்லும் அண்ணன். 

இது போன்ற உளவியலை சிதைத்து; நுணுக்கமாக இயல்பியலை மாற்ற துடிக்கும் கோடூர காட்சிகளை காணும் உள்ளம்; எதை நோக்கி நகரும் என்பது நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இன்றைய சினிமாக்களை கவனமாக கையாள வேண்டியது காலத்தின் கட்டாயம். அது சமூக நீதி பேசும் இயக்குணர்களின் கடமை. கொடூரங்களை இலகுவாக்கிவிட்டு சமூக முன்னேற்றம் பேசுவதில் எனக்கு உடன்பாடில்லை!!

வலசை பைசல்

No comments:

Post a Comment