January 21,
2013 10:39 am
ஈரோடு
மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஒரு காலி இடத்தில் ஒரு
இளம்பெண் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். அப்பெண்ணுக்கு
வயது 20க்குள் இருக்கும் என்று தெரிகிறது. கல்லூரி மாணவியாக இருக்கலாம்
என்று அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
அப்பெண் பாலியல்
பலாத்காரம் செய்யப்பட்டு இன்று (21,01,2013) அதிகாலை
2 அல்லது
3 மணி
அளவில் இங்கு கொண்டு வந்து எரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவ நடந்த
பகுதி கிராமப்புரம் என்பதால், மக்கள்
மத்தியில் ஒரு பீதியும் அச்சமும் ஏற்பட்டுள்ளது.
சம்பவ
இடத்தை மாவட்ட எஸ்.பி. பொன்னி பார்வையிட்டார், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
thamilan thanks
No comments:
Post a Comment