ஈராக்கில் அமெரிக்கர்கள் நடத்திய போரினால் 1.20 லட்சம் பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013, 08:56.18 மு.ப GMT ]
அமெரிக்கர்கள் கடந்த 2011ம் ஆண்டு வரை
ஈராக் நாட்டின் மீது நடத்திய போரினால் இதுவரை 1.20 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக
அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா, ஈராக்கில் அணு ஆயுதங்கள் உள்ளனவா என்பதை அறிய கண்டறியும் குழுவை
அனுப்பியதிலிருந்து அமெரிக்கர்கள் கடந்த 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை ஈராக்
மீது போர் தொடுத்துள்ளனர்.
இது குறித்து அமெரிக்க பேராசிரியர்கள் பேர்ரி லெவி, விக்டர் சிடெல் ஆகியோர்
கூறுகையில், கடந்த 2011ம் ஆண்டு வரை நடந்த இப்போரில் 1.20 லட்சம் பேர்
இறந்துள்ளதாகவும், 400 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும்
தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment