கணவருக்காக 5 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த கொடூர தாய்
[ வெள்ளிக்கிழமை, 22 மார்ச் 2013,
கணவருக்காக தான் பெற்ற 5
குழந்தைகளையும் கொலை செய்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு
வரை ரகசியமாக பெற்றெடுத்த 5 குழந்தைகளை கொலை செய்திருக்கிறார். இதற்கு அவர் கூறும் காரணம் வினோதமானது. அதிக குழந்தைகள் இருந்தால் எங்கே கணவர்
தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவாரோ என்ற பயத்தில் கொன்றதாக தெரிவிக்கிறார். ஏற்கனவே அவர் 2 குழந்தைகளை வளர்த்து வருகிறார். குழந்தைகளை கொலை செய்த தகவல்
தெரியவர அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது பிளென்ஸ்பர்கில் உள்ள கோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபணமானதையடுத்து அவருக்கு 9 ஆண்டுகள் சிறைத்
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜேர்மன் நாட்டு சட்டப்படி அந்த பெண்ணின் பெயர்
வெளியிடப்படவில்லை. .newsonews. thanks
No comments:
Post a Comment