March 5,
2013 08:31 am
துருக்கிக்கு கடந்த 2005ம் ஆண்டு திருப்பியனுப்பட்ட குர்தீயப்(Kurdish)
பெண் எட்டாண்டுகள் கழித்து ஜேர்மனிக்குத் திரும்பியபொழுது
விமான நிலையத்தில் அவரது கணவரையும் இரண்டு மகள்களையும் பார்த்து
கண்ணீர் விட்டுள்ளார்.
கஜாலி
சலாமி(Gazale Salame) என்ற பெண் கடந்த 1980ம் ஆண்டு தன் பெற்றோருடன் லெபனான் அகதியாக ஜேர்மனிக்கு வந்துள்ளார்.
பின்னர் ஹில்டெஷீம்(Hildesheim) என்ற ஊரில் தன் கணவர் மற்றும் மூன்று
குழந்தைகளுடன் சலாமி
வாழ்ந்தவந்த நிலையில் இவரை ஜேர்மனி அரசு சொந்த நாட்டுக்கு திரும்பிப்போகும்படி அறிவுறுத்தியது.
இப்பெண்ணிடம் துருக்கிக் கடவுச்சீட்டு இருந்ததாலும்
துர்க்கியர்களை ஜேர்மனி
திருப்பி அனுப்பியதாலும் கருவுற்றிருந்த நிலையிலும் கூட இப்பெண்ணை திருப்பி அனுப்ப அரசு உத்தரவிட்டது. கருவுற்றிருந்த ஒரு
வயது கைக்குழந்தையுடன் அந்த பெண்ணை ஜேர்மனி அரசு துருக்கித்
திருப்பியனுப்பியது.
இதன்
பின்னர் சலாமியும் அவரது கணவரும் மனித உரிமைக்காகப் போராடிவந்துள்ளனர். அதன் பலனாக ஜேர்மனி அரசு சலாமி திரும்பி
வர அனுமதி வழங்கியது. துருக்கியில் பிறந்த மகன் மற்றும் அழைத்துச்
சென்ற மகளோடு சலாமி ஞாயிறன்று ஹேனோவர் விமானநிலையம் வந்து
இறங்கியுள்ளார்.
thamilan thanks
No comments:
Post a Comment