அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 17 March 2013

கீழக்கரையில் பெண்களை கேலி செய்த வாலிபர் அடித்துக்கொலை: போலீசார் விசாரணை


ராமநாதபுரம், மார்ச் 17-

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 50). இவர்களது மகன் ஜானகிராமன் (29). இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கீழக்கரையில் உள்ள கீழதெருவில் அபுபக்கர் என்பவர் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

வேலைக்கு சேர்ந்து 2 மாதமே ஆகிறது. ஜானகிராமன் நேற்று வேலைக்கு சென்றார். அப்போது அவர் கீழக்கரை ரோட்டில் நடந்து சென்ற பெண்களை கேலி-கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக வந்த வாலிபர்களிடம் இது குறித்து பெண்கள் புகார் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் ஜானகிராமனிடம் தட்டி கேட்டனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த 5-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஜானகிராமனை சரமாரியாக அடித்து உடைத் தனர்.

இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார். இதனை பார்த்ததும் வாலிபர்கள் அனைவரும் ஓடி விட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாகி விட்ட வாலிபர்களை தேடி வருகிறார்கள். வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

maalaimalar thanks

No comments:

Post a Comment