மத்திய அரசின் கூட்டணியில் இருந்து வெளியேறியது திமுக. கருணாநிதியின் அதிரடி அறிவிப்பு.
19 March 2013
கடந்த சில
வருடங்களாக மத்திய அரசின் கைப்பாவையாக எதற்கெடுத்தாலும் தலையாட்டிக்கொண்டு இருந்த
திமுக மிகவும் தாமதமாக மத்திய அரசு கூட்டணியில் இருந்து இன்று வெளியேறுவதாக
கருணாநிதி அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்று காலை 11
மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்த கருணாநிதி,
இலங்கைக்கு எதிரான அமெரிக்க கொண்டுவரும் தீர்மானத்தில் இந்திய அரசு திருத்தம்
கொண்டுவர வேண்டும் என திமுகவின் கோரிக்கையை இந்திய அரசு செவிசாய்க்காததால் இனியும்
மத்திய அரசில் நீட்டிப்பது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் என கருதி,
கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது.
இதனால் டெல்லியில்
தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு திமுக அளித்து வந்த ஆதரவை திடீரென
வாபஸ் பெற்றுள்ளதால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா? இந்த நெருக்கடியை எப்படி
சமாளிப்பது என்பது குறித்து சோனியா தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்னும்
சிறிது நேரத்தில் கூட இருக்கின்றது.
அதே சமயம்,
21ஆம் தேதி நடைபெறும் வாக்கெடுப்பில் இந்திய அரசின் நிலை என்ன என்பதை பொறுத்து
ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவை தொடர்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும்
அவர் மற்றொரு கேள்விக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார். இலங்கையில் தமிழர்கள் உரிமைக்காக ராஜபக்சே எதுவும்
செய்யவில்லை என்று கூறிய கருணாநிதி, இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தி்த்து பேசும்
திட்டம் இல்லை என்றார். மத்திய அரசு
கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையை செய்கிறது என்றும் கருணாநிதி
குற்றம்சாட்டினார்.
No comments:
Post a Comment