திருடர்களை கொலை செய்து தலைகீழாக தொங்க விட்ட எகிப்திய மக்கள்
[ செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013,
பட்டப் பகலில் வீதியில் மோட்டர்
ரிக்ஷா திருடி அகப்பட்ட இரு இளைஞர்களை பொதுமக்களே கொலை செய்து தலை கீழாக தொங்க
விடப்பட்ட சம்பவம் எகிப்தில் நடந்துள்ளது.இந்த இரு இளைஞர்களையும் விசாரணைக்காக பொலிசிடம் ஒப்படைக்காமல் நூற்றுக் கணக்கில்
மக்கள் ஒன்று கூடி அவர்களை நையப் புடைத்து சட்டையைக் கழற்றி இரு கால்களிலும்
கயிற்றினால் கட்டி நைல் நதிக்கரையோரத்தில் நகர மத்தியில் உள்ள மக்கள் நெருக்கடி
மிக்க பேருந்து நிலையத்தில் தலைகீழாகத் தொங்க விட்டனர். இக்காட்சியை அங்கு ஒன்று கூடிய 3000 பேர் கண்டதுடன் சிலர் தமது கமெராக்களினால்
புகைப்படமும் எடுத்தனர். இதேவேளை இவர்கள் திருடிய ரிக்ஷாவின் உள்ளே ஒரு யுவதி இருந்ததாகவும் ஆனால் அவர்
இறுதியில் தப்பித்து விட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த கொடூரத்தை பத்திரிகைக்காகப் புகைப்படம் எடுக்க நிருபர் ஒருவர்
முனைந்த போது அவரையும் கொன்று விடுவதாக மக்கள் கூட்டம் அச்சுறுத்தியதாக அவர்
தெரிவித்துள்ளார். newsonews thanks
No comments:
Post a Comment