அமெரிக்க
இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நூலன்ட் நேற்று வாசிங்டனில்
செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர்
இது குறித்து மேலும் கருத்து வெளியிடுகையில்,
இலங்கை
அரசு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் நடைமுறைப்படுத்தாத திட்டங்களை
நடைமுறைப்படுத்த வேண்டும்.
அவர்கள்
அனைத்துலக சமூகத்தின் சொல்லைக் கேட்க வேண்டும்.
உங்களுக்குத்
தெரியும், நாம் 2012ல் முன்வைத்த தீர்மானத்தை வரவேற்று 24 நாடுகள் ஆதரவாக
வாக்களித்தன.
தனது
சொந்த மக்களுக்கு அதன் பொறுப்புகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு நாம் அழைப்பு
விடுக்கிறோம்.
நல்லிணக்கம்
மற்றும் பொறுப்புகூறலில் இன்னமும் நிறைவேற்றப்படாத விவகாரங்களுக்குப்
பதிலளிப்பதற்கு இலங்கை அரசுக்கு அனைத்துலக சமூகத்தின் ஆதரவை,தீர்மானம் மிகத்
தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
நாம்
ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தோம்.
வாசிங்டனுக்கு
வந்த இலங்கையின் மூத்த அதிகாரி உள்ளிட்டோரிடம், நாம் மிகத்தெளிவாகவே
கூறியிருந்தோம்.
நீங்கள்
முன்னே அடியெடுத்து வைக்காவிட்டால் நாம் இதேபோன்று மீண்டும் தீர்மானத்தை கொண்டு
வருவோம் என்று ஆறு மாதங்களுக்கு முன்னர் அவர்களிடம் கூறியிருந்தோம்.
ஆனால்
எந்த முன்னேற்றத்தையும் நாம் காணவில்லை. மீண்டும், இலங்கை என்ன முடிவுகளை எடுக்கப்
போகிறது என்று பார்க்க வேண்டும்.
நாம்
முன்னரே கூறியது போன்று, அவர்கள் எதையும் செய்யவில்லையென்று அனைத்துலக சமூகம்
கருதினால், நாம் அடுத்த அடிகளை எடுத்து வைக்க முடியும்.” என்றும் அவர்
தெரிவித்துள்ளார்
news.tamilstar
thanks
No comments:
Post a Comment