March 19,
2013 10:00 am
இலங்கையில் மீண்டும் தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
என கூறி திண்டுக்கல்லில் ஆண், பெண், குழந்தைகள் என 3,000 இலங்கை
அகதிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அடியனூத்து, கோபால்பட்டி உட்பட ஏழு முகாம்களில் அகதிகள் வசிக்கின்றனர். இந்த முகாமை சேர்ந்த, 3,000 பேர், திண்டுக்கல்லில் நேற்று (18) உண்ணாவிரதம் இருந்தனர்.
அகதிகள்
சிலர் கூறியதாவது: இலங்கைப் போரின் போது சிங்கள ராணுவத்தினரால் சிறை
பிடிக்கப்பட்ட தமிழர்களை விடுவிக்க வேண்டும்.
தமிழர்களுக்கு இலங்கையில் தனி நாடு வேண்டும். தமிழர்கள்
பகுதியில் உள்ள சிங்கள ராணுவம் அகற்றப்பட வேண்டும்.
சிறுவன்
பாலச்சந்திரன் மரணத்திற்கு, இலங்கை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதில் தர வேண்டும்.
போர்
குற்றங்களுக்கு இலங்கை அரசு பொறுப்பேற்க வேண்டும். இங்குள்ள இலங்கை தமிழர்கள் அங்கு மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும். இவ்வாறு
அவர்கள் கூறினர்.
thamilan thanks
No comments:
Post a Comment