மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா கடந்த 15 ஆம் தேதி தாக்கல் செய்துள்ள அறிக்கை ராஜபக்சே அரசு தயாரித்த அறிக்கையாகவே உள்ளதாக கூறியுள்ளார். , இலங்கையில் தமிழர்களின் மீள் குடியேற்றமும், மறுவாழ்வும் வரவேற்க தக்க வகையில் உள்ளதாக இந்தியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வைகோ குறிப்பிட்டுள்ளார். மனித உரிமை மீறல் குறித்த புகார்களை இலங்கை அரசே முறையாக விசாரிக்கும் என்று இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடத்தி, இலங்கை சுமூதமான வெற்றி காண வேண்டும் என்று வாழ்த்துவதாக ஜெனிவாவுக்கு இந்தியாஅறிக்கை தந்துள்ளது கொலைபாதக சிங்கள அரசுக்கு பல்லாக்கு தூக்குகிற ஈனச் செயல் என்று அந்த வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.
sathiyam.tv thanks
No comments:
Post a Comment