கடைசியாக
பிரசுரிக்கப்பட்டது: 22 ஏப்ரல், 2013 - 09:39 ஜிஎம்டி
19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜா தீன்தயாள் புகழ்மிக்க புகைப்படக்
கலைஞர் ஆவார். ஹைதராபாத் மன்னரின் ஆஸ்தான புகைப்படக் கலைஞராக அவர் திகழ்ந்தார்.
1899ல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஹைதராபாத் மன்னர் நிஜாம் மஹ்பூப் அலி கானும்
அவருடைய சகாக்களும் புலித்தோலுடன் காட்சியளிக்கின்றனர்.
தீன் தயால் பல்வேறு இந்திய நகரங்களில் புகைப்பட நிலையங்களை அமைத்து
59 புகைப்படக் கலைஞர்களை வேலைக்கு அமர்த்தினார். ரஷ்யப் பிரபு அலெக்ஸாண்டர் 1891ல்
சிறுத்தை ஒன்றை வேட்டையாடிப் பிடித்த பின்னர் எடுத்த படம்
இது.
கட்டிடங்கள், இயற்கைச் சூழல், மக்கள் என முப்பதாயிரத்துக்கும்
அதிகமான புகைப்படங்களை தீன்தயாளும் அவரது புகைப்படக் கலைஞர்களும் எடுத்தனர். 1890ல்
ஹைதராபாத்தில் நடந்த ஆடை அலங்கார நடன விருந்து ஒன்றில் எடுத்த படம்
இது.
தீன் தயாளின் புகைப்படங்கள் பற்றிய ஒரு புத்தகம் இந்தியாவில்
அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. நிஜாம் மஹ்பூப் அலி கானின் இந்த உருவப்படம் 1887ல்
அல்லது 1888ல் எடுக்கப்பட்டது.
பஷீர் பாக் அரண்மனையின் விஸ்தார அறை ஒன்று. 1888ல் எடுக்கப்பட்ட
படம் இது.
1894ல் இந்தூரில் உள்ள தனது புகைப்பட நிலையத்தில் வைத்து தீன்தயாள்
எடுத்த புகைப்படம் ஒன்றின் பின்பக்கம் இது. இவ்வகையான படங்களை கேபினட் கார்ட்
போட்டோ என்று சொல்வார்கள்.
ஆந்திர மாநிலத்தில் ஹனம்கொண்டா என்ற இடத்திலுள்ள ஆயிரங்கால்
மண்டபம்.
ஹைதராபாத் சமஸ்தானத்தின் பிரதம அமைச்சர் நவாப் அஸ்மான் ஜா பகதுரின்
புகைப்படம். 1890ல் எடுக்கப்பட்டது.
ராஜஸ்தானின் தீக் பகுதியில் உள்ள பிரபல "ஜல மஹால்" அரண்மனையை
1884ஆம் ஆண்டில் எடுத்த புகைப்படம்.
ஹைதராபாத்தின் பிரதம மந்திரியாக விளங்கிய மஹாராஜா கிஷென்
பிரசாத்தின் உருவப்படம்.
குவாலியர் கோட்டையின் நுழைவு வாயிலை 1878ல் எடுத்த
புகைப்படம்.
முகலாயப் பேரரசர் அக்பருடைய மகளின் சமாதி. இச்சமாதி ஆக்ரா அருகே
உள்ளது. 1886-1887ல் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
No comments:
Post a Comment