அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 21 April 2013

திருச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: 3 பேர் பலி


திருச்சி அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்: 3 பேர் பலி
திருச்சி, ஏப். 22-
 
சென்னையில் இருந்து மதுரைக்கு அரசு விரைவு பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் பூமிநாதன் ஓட்டிவந்தார். கண்டக்டராக மதுரையை சேர்ந்த தங்கவேல் (வயது 40) என்பவர் பணியில் இருந்தார். அந்த பஸ்சில் 40 பயணிகள் பயணம் செய்தனர்.
 
இந்தநிலையில் அந்த பஸ் இன்று அதிகாலை 4.15 மணியளவில் திருச்சி நகர் பகுதியான மன்னார்புரம் காந்தி நகர் அருகே ராணுவ பயிற்சி மையம் அருகே வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற சிமெண்ட் கலவை ஏற்றிய லாரி திடீரென நடு ரோட்டில் நின்றது. அந்த சமயம் லாரி மீது பின்னால் வந்த அரசு விரைவு பஸ் வேகமாக மோதியது.
 
இதில் பஸ்சின் முன்பகுதி அடையாளம் காண முடியாத அளவுக்கு அப்பளம் போல நொறுங்கியது. அத்துடன் முன்வரிசை இருக்கைகள் முற்றிலும் சிதைந்து உருக்கு லைந்தது. இந்த கோர விபத்தில் கண்டக்டர் உள்பட 3 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
 
அவர்கள் பெயர், விபரம் வருமாறு:-
 
1.தங்கவேல், கண்டக்டர்.
2.செந்தில்ராணி (45), க/பெ. கணேசன், திருகோணம், மதுரை.
3.சரோஜினி (40), மதுரை.
 
மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த சீனிவாசன் (42), சென்னை குரோம் பேட்டையை சேர்ந்த தனபால் (37), திருப்பூரை சேர்ந்த ஷீலாதேவி, சிவகாசியை சேர்ந்த பாக்கியலட்சுமி, தண்டபாணி மகன் பிரபாகரன் (11) உள்பட 9 பேர் பலத்த காயமும், 7 பேர் லேசான காய மும் அடைந்தனர்.
 
விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
 
விபத்தில் இறந்த கண்டக்டர் மற்றும் 2 பெண்கள் உடல்கள் பஸ்சின் இருக்கைக்குள் சிக்கிக்கொண்டது. பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
 
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்திற்கு காரணமான லாரி கடலூரில் இருந்து தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு சிமெண்ட் கலவை ஏற்றிக்கொண்டு வந்தது. லாரியின் டிரைவராக விருதாச்சலத்தை சேர்ந்த வீரமணி (23) என்பவரும், கிளீனராக செல்வராஜும் இருந்தனர்.
 
 அதிகாலை நேரத்தில் பாதை தெரியாமல் திருச்சி நகருக்குள் நுழைந்த அந்த லாரியின் டிரைவர் வீரமணி எந்த பாதையில் செல்வது என்று குழம்பியபடி வந்துள்ளார். அப்போது வழிகேட்பதற்காக பின்னால் வந்த வாகனத்தை கவனிக்காமல் நடுரோட்டில் லாரியை நிறுத்தியுள்ளார். அந்த சமயத்தில்தான் அரசு விரைவு பஸ் மோதியுள்ளது.
 
இதையடுத்து உடனடியாக டிரைவர் வீரமணி எடமலைப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். விபத்தில் சிக்கிய அரசு விரைவு பஸ்சின் கண்டக்டர் தங்கவேலுவுக்கும், பயணிகளுக்கும் சென்னையில் பஸ் புறப்பட்டதில் இருந்தே வாக்குவாதம் இருந்து வந்துள்ளது.
 
இதுபற்றி சிலர் பஸ் டெப்போவில் புகார் கூறப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. இறுதியில் இந்த விபத்தில் கண்டக்டர் பலியாகி விட்டார். 


news maalaimalar thanks

No comments:

Post a Comment