அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Sunday, 21 April 2013

சீன நிலநடுக்கம்: சாவு எண்ணிக்கை 195 ஆக உயர்வு



First Published : 22 April 2013

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 10,500 பேர் காயமடைந்துள்ளனர்.

சிச்சுவான் மாகாணம், லுஷான் மாவட்டத்தில் உள்ள யான் நகரில் சனிக்கிழமை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாக பதிவானது. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் பல மணிநேரம் காத்திருந்தனர்..
மொத்தம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.  மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
கட்டட இடிபாடுகளில் இருந்து 90 பேர் மீட்கப்பட்டனர். 600-க்கு மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. சீனப் பிரதமர் லீ கெகியாங் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு
ஆறுதல் கூறினார். கடுமையாக பாதிக்கப்பட்ட லுஷான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்கள், மருத்துவமனைகளுக்குச் சென்று அவர் ஆறுதல் கூறினார்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க முன்னுரிமை தரும்படி அவர் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 ஆயிரம் கூடாரங்கள், 800 தற்காலிக குடியிருப்புகளை வழங்கும்படியும் அவர் அறிவுறுத்தினார்..
இதற்கிடையே சீனாவின் மஞ்சள் கடலில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 அலகுகளாக பதிவானது.

news dinamani thanks

No comments:

Post a Comment