பாகிஸ்தான்: தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் பலி
[ செவ்வாய்க்கிழமை, 23 ஏப்ரல் 2013,
பாகிஸ்தானில் உள்ள 18
கோடி மக்கள் தொகையில், சன்னி முஸ்லிம்கள் 80 சதவிகிதத்தினரும், ஷியா முஸ்லிம்கள் 20
சதவிகிதத்தினரும் உள்ளனர். அவர்களிடையேயான மோதலில் பலூசிஸ்தான் மாகாண குவெட்டா
நகரம் அதிகம் பாதிக்கப்படுகிறது.இந்நிலையில், குவெட்டா நகர சோதனைச்சாவடிக்கு காரில்
வந்த தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல் நடத்தினான். ஷியா முஸ்லிம்கள் அதிகம்
வசிக்கும் இங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவத்தினர் உள்பட 6 பேர்
கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சமீபத்தில் நடந்த
சன்னி-ஷியா பிரிவினரிடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment