அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 23 April 2013

நெல்லை அருகே பதட்டம் -அமைதி முயற்சியில் தமுமுக


நெல்லை அருகே பதட்டம் -அமைதி முயற்சியில் தமுமுக

E-mail Print PDF
நெல்லை,அம்பை அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி என்ற கடந்த ஒருசில தினங்களுக்கு முன்னர் இரண்டு நபர்களுக்கிடையே ஏற்ப்பட்ட தகராறு மோதலாக உருவெடுத்தது.

பின்னர் தமுமுக முயற்சியால் அமைதி ஏற்ப்பட்டது.இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் ஹரிகிருஷ்ணன் மற்றும் குமார் தலைமையில் வந்த 20 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள ஹோட்டல் ஒன்றிற்க்கு புகுந்து அங்குள்ள வேலையாட்கள் மீது தாக்க தொடங்கினர்.பின்னர் அங்குள்ள பொருட்களை அடித்து நொருக்கினர்.
அத்தோடு நில்லாமல் அந்த கும்பல் கலவரம் செய்யும் நோக்கத்துடன் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் புகுந்து கற்களைக் கொண்டும் உருட்டு கட்டையாலும் தாக்க தொடங்கிங்கினர்.
இந்த தாக்குதலினால் காயமடைந்தவர்கள் உயிருக்கு பயந்து அருகில் உள்ள பள்ளி வாசலில் தஞ்சமடைந்தனர்.

இச்செய்தியறிந்த உடன் நெல்லை மாவட்ட தமுமுகவினர் மாவட்ட தலைவர் மைதீன் பாரூக் தலைமையில் அங்கு விரைந்தனர்.
மேலும் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் விஜேந்திர பிதரியிம் தொடர்பு கொண்டு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்க்கொள்ள செய்து,பள்ளிவாசலில் தஞ்சமடைந்தவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர்.
மேலும் சம்பந்த பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தேவையான பாதுகாப்பு செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர்.நெல்லையில் கடந்த சில தினங்களாக இந்து முன்னனி, ஆர் எஸ் எஸ் போன்ற விஷமிகள் மதகலவரத்தை தூண்டும் விதமாக வால்போஸ்டர் ஒட்டுவதும்,பிட்நோட்டீஸ் விநியேகிப்பதும், பொதுக்கூட்ட மேடைகளில் முஸ்லிம்களை தரக்குறைவாக விமர்சிப்பதுமாக இருந்து வருகின்றனர்.
இவர்களை காவல்துறையோ,தமிழக அரசோ கண்டு கொள்வதில்லை.தமிழக அரசே,அமைதி பூங்காவான தமிழகத்தை அமளிக்காடாக்க துடிக்கும் விஷமிகளை அடையாளங்கண்டு அவர்களை ஒடுக்க வேண்டும்.
இச்சம்பவம் குறித்து இன்று பள்ளக்கால் புதுக்குடி ஜமாத்தார்கள் நெல்லை வந்து தமுமுக மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தனர்.
மாவட்ட நிர்வாகிகள் தலமையில் மாவட்ட கன்கானிப்பாளர் மற்றும் மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்து சம்பவ இடத்தில் பாதுகாப்பை அதிகபடுத்தவும் முஸ்லிம்கள் மீதுபோடப்பட்ட வழக்கை வாபஸ்பெறவும் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரியும் பேச்சுவார்தை நடத்தினர்.
Last Updated ( Wednesday, 24 April 2013 06:34 ) 

No comments:

Post a Comment