அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Thursday, 23 May 2013

ஈரான் உளவாளிகள் உட்பட 10 பேர் சவுதி அரேபியாவில் கைது!


தமது நாட்டுக்குள் உளவு வேலைகளில் ஈடுபட்ட உளவாளிகள் என 10 பேரை கைது செய்துள்ளது சவுதி அரேபியா. இவர்கள் ஈரானிய உளவுத்துறையின் உளவாளிகள் என்பது சவுதியின் குற்றச்சாட்டு. கைது செய்யப்பட்ட 10 பேரில், 8 பேர் சவுதி ஆரேபிய பிரஜைகள், ஒருவர் லெபனானை சேர்ந்தவர், மற்றவர் துருக்கி.

இவர்கள், ஈரானிய உளவுத்துறையினரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு, சவுதிக்குள் உளவு வேலைகள் பார்த்து தகவல் அனுப்பினார்கள் என்று தெரிவித்துள்ளார், சவுதியின் உட்துறை அமைச்சர் ஜெனரல் மன்சூர் அல் துர்கி. கடந்த மார்ச் 19-ம் தேதி, 18 பேர் அடங்கிய குழு ஒன்றை உளவு வேலைகள் பார்த்த குற்றச்சாட்டில் சவுதி பாதுகாப்பு படையினர் கைது செய்திருந்தனர்.


அவர்கள், சவுதிக்குள் ஒரு உளவு நெட்வெர்க் அமைத்து பல தகவல்களை பெற்று வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர் என்று அப்போது கூறப்பட்டது. அவர்களின் நெட்வெர்க் தொடர்பாக புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அடுத்தே, தற்போது கைது செய்யப்பட்ட 10 பேரும் அடையாளம் காணப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக மேலதிக தகவல் எதையும் சவுதி உட்துறை வெளியிடவில்லை.


இவர்கள் என்ன விதமான தகவல்களை வெளியே அனுப்பினார்கள் என்ற விபரமும் தெரியவில்லை. அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. தமது மிடில்-ஈஸ்ட் நெட்வெர்க்கின் ஆபரேஷனின் குறிப்பிட்ட சில பிரிவுகளை சவுதி அரேபியாவில் வைத்தே இயக்குகிறது என்பது, மேலதிக தகவல்.

News : Source

eutamilar thanks

No comments:

Post a Comment