May 15, 2013 09:58 am
சுவிஸ் வங்கிகளில் கடந்த வருடம் 1,585கறுப்பு பண பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.2012-ஆம் ஆண்டில் சந்தேகத்துக்குரிய வகையில் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக கருதப்படும் கணக்குகளை ஆய்வு செய்ததில் 1,585 பரிவர்த்தனைகள் கறுப்பு பணம் பதுக்கப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
இவற்றில்15 பரிவர்த்தனைகள் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ஏறத்தாழ ரூ.20 ஆயிரம் கோடி எனத் தெரிகிறது. ஆறு பரிவர்த்தனைகளின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் கோடி எனவும் கூறப்பட்டுள்ளது.
சுவிஸ் வங்கி விதிமுறைகளின் ரகசியத் தன்மையினால் உலகின் பல பாகங்களிலிருந்தும் இங்கு கறுப்பு பணம் பதுக்கப்படுகிறது. மேலும் பயங்கரவாதம், போதை மருந்து போன்ற செயல்களுக்கும் சுவிஸ் வங்கிகள் மூலம் பணம் சுழற்சி செய்யப்படுகிறது. கறுப்பு பண சொர்க்கம் என்று தங்கள் நாடு அழைக்கப்படும் களங்கத்தைப் போக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. வங்கிக் கணக்கு விவரங்களை அளிப்பது தொடர்பாக பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்திவருகிறது.
thamilan thanks
No comments:
Post a Comment