அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 13 May 2013

சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு


சவூதி: 15 ஆயிரம் இந்தியர்களின் பாஸ்போர்ட்கள் இந்திய தூதரகத்தில் ஒப்படைப்பு
துபாய், மே 14- 

சவூதி அரேபியாவின் குடிமக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தை அந்நாட்டின் அரசு நிறைவேற்றியது. இதனையடுத்து, சவூதியில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இதுமட்டுமின்றி, அந்நாட்டில் அனுமதியின்றி மறைந்து வாழ்ந்துக்கொண்டு வேலை செய்து வரும் இந்தியர்களை கண்டுபிடித்து சிறையில் அடைக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. 

சவூதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்துக்கான இறுதிதேதி விரைவில் முடிவடைய உள்ளது. 

இந்நிலையில், தங்களது விசாக்களை முறைப்படுத்திக் கொள்ள விரும்பும் 15 ஆயிரம் இந்தியர்கள் தங்களின் பாஸ்போர்ட்களை சவூதி அராசாங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். 

இவர்களில், விசா இல்லாமல் அந்நாட்டில் தங்கியிருந்த குற்றத்திற்காக சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களும் உள்ளனர். இந்த பாஸ்போர்ட்களை சவூதி அரசாங்கம் இந்திய தூதரகத்தில் ஒப்படைத்துள்ளது. 

மேற்கண்ட பாஸ்போர்ட்கள் பற்றிய விவரங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ள இந்திய தூதரகம் உரிய ஆவணத்தை காட்டி பாஸ்போர்ட்டை பெற்று செல்லலாம் என அறிவித்துள்ளது.

maalaimalar thanks

No comments:

Post a Comment