திங்கள், 6 மே 2013
இந்த குழு கடந்த வாரம் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கபட்டிருக்கும் இந்தியாவை சேர்ந்த கைதிகளை பார்க்க சென்றபோது, சக கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சரப்ஜித் சிங் வைக்கபட்டிருந்த லாகூர் கோட் லக்பட் சிறையில் 20 கைதிகளும், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் 2 கைதிகளும், கராச்சியில் உள்ள மலிர் சிறையில் 1 கைதியும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர் எனத் தெரியவந்தது.
இவர்கள் சிகிச்சைக்காக எந்தவொரு மருத்துவமனைக்கும் அழைத்து செல்லப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ள நிலையில், இதை நேரில் கண்டறிந்த இந்திய-பாகிஸ்தான் நீதித்துறை குழுவினர், மிகவும் உடல் நலமற்று இருக்கிறவர்களை, மனநலம் பாதித்தவர்களை, செவித்திறன் இழந்தவர்களை, பேச இயலாதவர்களை உரிய மருத்துவமனையில் அனுமதித்து சரியான சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்துள்ளனர்.
இத்தகைய கைதிகளில், இளங்குற்றவாளிகள், பெண்கள், முதியவர்கள் ஆகியோரை கருணை அடிப்படையிலும், மனித நேய அடிப்படையிலும் நடத்துவதற்கு ஏற்ற வழிமுறை காண வேண்டும் என்றும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்தியக் கைதிகளையும், இந்திய சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளையும் வருடத்துக்கு குறைந்தது 4 முறையாவது தூதரக அதிகாரிகள் பார்த்து வர வகை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
tamil.webdunia thanks
No comments:
Post a Comment