மலேசியாவை அரை நூற்றாண்டுக்கும்
அதிகமான காலமாக ஆண்டுவருகின்ற பாரிசான் தேசியக் கூட்டணி ஞாயின்றன்று நடந்த
தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவரும்
ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் செயல்பட வேண்டும் என்று அக்கூட்டணி
கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தத் தேர்தலில் கவலையளிக்கும் விதத்தில் மக்கள்
பிளவுபட்டுப்போயிருந்தனர் என்றும், சீன இனச் சிறுபான்மையினரிடையே
எதிர்க்கட்சி ஆதரவு அலை சுனாமி போல பெருக்கெடுத்தது என்றும் பிரதமர் நஜீப்
ரஸாக் கூறியுள்ளார்.பல்வேறு தேர்தல் முறைகேடுகளுக்க்கு நாட்டின் தேர்தல் ஆணையம் உடந்தையாக இருந்தது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மலேசிய சரித்திரத்தில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு கடுமையான போட்டி இந்தத் தேர்தலில் நிலவியிருந்தது.
222 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 133 இடங்கள் ஆளும் பாரிசான் கூட்டணிக்கும் 89 இடங்கள் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் சென்றுள்ளன.
தேர்தல் முடிவுகள் - ஒரு ஒப்பீடு
| 2008 தேர்தல் | 2013 தேர்தல் |
| பாரிசான் தேசியக் கூட்டணி 140 | பாரிசான் தேசியக் கூட்டணி 133 |
| எதிர்க்கட்சிக் கூட்டணி 82 | எதிர்க்கட்சிக் கூட்டணி 89 |
| நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 222 bbc.co.uk thanks | |
No comments:
Post a Comment