அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday, 21 May 2013

வடமாநிலங்களில் மக்களை வாட்டி வதைக்கும் வெயில்: மூவர் பலி

[ புதன்கிழமை, 22 மே 2013, 
வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
இம்மாதம் முதல் வாரத்தில் தொடங்கிய கத்திரி வெயில், தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.
வரும் 28ஆம் திகதியோடு அக்னி நட்சத்திரம் முடிவடையும் நிலையில், வட மாநிலங்களில் கடும் வெயில் வாட்டுகிறது. அத்துடன் அனல் காற்றும் வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா மற்றும் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் வெயில் வாட்டுகிறது.
நேற்று முன்தினம், ம.பி. மாநிலம், கஜுராஹோவில் அதிகபட்சமாக, 46.7 டிகிரி செல்சியசாகவும், தலைநகர் போபாலில், 44.3 டிகிரி செல்சியசாகவும், வெப்பநிலை பதிவானது.
அங்கு நிலவும் கடும் வெப்பம் காரணமாக 50 வயது முதியவர், 26 வயது இளைஞர் மற்றும் பொலிஸ் பயிற்சியில் ஈடுபட்டிருந்த, பயிற்சி காவலர் உட்பட மூன்று பேர் பலியாயினர்.
அம்மாநிலங்களில் வசிக்கும் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


.newindianews thanks

No comments:

Post a Comment