அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 10 June 2013

வெள்ளத்தில் மிதக்கும் ஜேர்மனி: அணை உடைந்ததால் தவிக்கும் மக்கள் (வீடியோ இணைப்பு)

[ திங்கட்கிழமை, 10 யூன் 2013, 08:01.52 மு.ப GMT ]
மத்திய ஐரோப்பிய நாடுகளில் பலத்த மழை பெய்து வருவதால், ஜேர்மன், ஹங்கேரி மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இந்நிலையில் கிழக்கு ஜேர்மனியில் உள்ள எல்பி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அதன் காரணமாக அந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை உடைந்தது.
இதனால் மெக்டே பர்க் நகருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால், 24 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.
வழக்கத்தைவிட 4 மடங்கு அதிகமாக தண்ணீர் தேங்கியிருப்பதால் அந்த நகரம் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.
இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
எனவே அங்கிருந்த 25 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு அணையும் உடையும் நிலையில் உள்ளதால், அதனை பலப்படுத்தும் பணி நடக்கிறது.
இதற்கிடையே வெள்ளம் பாதித்த மெக்டேபர்க் நகர அதிபர் ஜோசிம் ஹவுக் நேரில் சென்று பார்வையிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தினார்.
newsonews. thanks

No comments:

Post a Comment