மேலும், சுமார் நூறு கோடி ரூபாயை சர்கோசிக்கு வழங்கியதாக கடாபி தம்மிடம் தெரிவித்ததாக மிசௌரி கூறியுள்ளார்.
லிபியாவின் ஜனாதிபதியாக இருந்த கடாபி, சர்வதேச படைகளின் தாக்குதலில் கடந்த 2011ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்தத் தாக்குதலை அப்போதைய பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோஸியின் உத்தரவின் பேரில் பிரான்ஸ் படைகள்தான் முன்னின்று நடத்தின.
ஒருபுறம் கடாபியிடம் பணம் வாங்கிக் கொண்டு, மறுபுறம் அவரை கொலை செய்வதற்கும் உதவியதாக சர்கோசி மீது புகார் எழுந்துள்ளது.
கடாபியிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை சர்கோசி அபகரித்ததாக கடந்த ஆண்டிலேயே கடாபியின் மகன் ஃசைப் அல்-இஸ்லாம் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment