ஈரான் கரன்சிக்கு தடை. ஒபாமாவின் அதிரடி அறிவிப்பால் நாட்டின் பொருளாதாரம் முடங்கும் அபாயம்.
05 June 2013
ஈரான் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்க அந்நாட்டிற்கு எதிராக தினசரி ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறது.
முதலில் ஈரான் மீது உலகளாவிய பொருளாதார தடை விதித்தது.
பின்னர் ஈரானின் பெட்ரோலிய கெமிக்கல் கம்பெனிகளுக்கு அமெரிக்க தடை விதித்தது.
நேற்று ஒபாமா விடுத்த ஒரு அறிக்கையில் ஈரானின் கரன்சிக்கு தடை விதித்துள்ளார். ஈரான் பணத்தை பரிமாற்றம் செய்யக்கூடாது என்றும் மீறி பரிமாற்றம் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இதனால் ஈரான் பணத்தை வைத்திருக்கும் வெளிநாட்டில் இருப்பவர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
ஒபாமாவின் இந்த அதிரடி உத்தரவால் ஈரான் நாட்டின் பொருளாதாரமே முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது அடுத்தடுத்து மூன்று தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஈரான் அமெரிக்காவிற்கு பணிய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment