June 8, 2013 01:24 pm
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் வெள்ளை மாளிகைக்கு தினமும் ஏராளமான கடிதங்கள் வருகின்றன. அவற்றை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்திய பிறகே ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு வந்த கடிதத்தில் ´ரிசின்´ என்ற கொடிய விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதேபோல் நியூயார்க் மேயர் மிச்சல் புளூம்பெர்க் அலுவலகத்துக்கு வந்த கடிதத்திலும் விஷம் தடவப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதை அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு பிரிவு (எப்பிஐ) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அமெரிக்க ஜனாதிபதி,மேயருக்கும் விஷம் தடவிய கடிதம் அனுப்பியது, டெக்சாஸ் மாகாணம் நியூ பாஸ்டனில் வசிக்கும் நடிகை ஷான் ரிச்சர்ட்சன் (35) என்பது தெரியவந்தது.
கடந்த மே 20ம் திகதி ஜனாபதி ஒபாமாவுக்கு விஷம் தடவிய மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு அவரது கணவர் உதவியாக இருந்துள்ளார்.
சந்தேகத்தின் பேரில் எப்பிஐ பொலிசார் நடிகை ஷான் ரிச்சர்ட்சனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது விஷம் தடவிய கடிதம் அனுப்பிய விபரம் தெரியவந்தது.
ஆனால் ரிச்சர்ட்சன் இதை மறுத்துள்ளார். இவர் தற்போது கர்ப்பிணியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
thamilan thanks
No comments:
Post a Comment