ராமநாதபுரம், ஜூன் 11-
ராமேசுவரத்துக்கும், தங்கச்சி மடத்துக்கும் இடையே உள்ள மெய்யம்புளியில் சத்தியா நகர் எதிரே உள்ள ரெயில் தண்டவாளத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவர் தலைசிதறிய நிலையில் இறந்து கிடந்தார். இன்று காலைஅந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ராமநாதபுரம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனிப்பிரிவு காவலர் மணிமாறன் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் பள்ளி சீருடையை அணிந்திருந்தார். அருகில் கிடந்த பையில் தொண்டி அருகே உள்ள மண மேல்குடியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையின் பெயர் உள்ளது.
வலதுகாலில் தழும்பு உள்ளது. இறந்தவர் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரமும் தெரியவில்லை.
ராமேசுவரத்துக்கும், தங்கச்சி மடத்துக்கும் இடையே உள்ள மெய்யம்புளியில் சத்தியா நகர் எதிரே உள்ள ரெயில் தண்டவாளத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஒரு மாணவர் தலைசிதறிய நிலையில் இறந்து கிடந்தார். இன்று காலைஅந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ராமநாதபுரம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனிப்பிரிவு காவலர் மணிமாறன் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் பள்ளி சீருடையை அணிந்திருந்தார். அருகில் கிடந்த பையில் தொண்டி அருகே உள்ள மண மேல்குடியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையின் பெயர் உள்ளது.
வலதுகாலில் தழும்பு உள்ளது. இறந்தவர் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரமும் தெரியவில்லை.
maalaimalar thanks
No comments:
Post a Comment