சீனாவின் மேற்குப் பகுதியில் உள்ள சனஅடர்த்தி மிக்க கன்சூ மாகாணத்தில் தையான்சூயி பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 11 பேர் மரணமானதாகவும், 81பேர் காயமடைந்ததாகவும், முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2.7 மில்லியன் மக்கள் வசிக்கும் கட்டடங்கள் செறிவான பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சேதங்கள் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
thamilan thanks
No comments:
Post a Comment