July 9, 2013 12:04 pm
எது எதுக்குதான் கட்டுப்பாடு விதிக்கணும்னு விவஸ்தையே இல்லாமப் போச்சு’னு கண்டிப்பா இந்த மேட்டரைப் படிச்சவுடனே சொல்வீங்க!
பொதுவாக, எல்லா நாட்டு அரசாங்கங்களும் தங்கள் நாட்டு மக்களோட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புல கண்ணுங் கருத்துமா இருக்கும்,அதுக்காக சட்டதிட்டங்களைக் கொண்டுவரும். ஆனால், வட கொரியா அரசு கண்ணையும் கருத்தையும் வெச்சது மக்களோட மண்டையில. யெஸ், ´உலகத்திலேயே நாங்கதான் பெரிய அப்பாடக்கர் அரசாங்கம்’னு சொல்ற மாதிரி, ’எப்படித் தங்கள் நாட்டு மக்கள் முடி வெட்டிக்கொள்ள வேண்டும்’ என்று 28 விதமான ஹேர் ஸ்டைல்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டிருக்கு.
´இந்த 28 விதமான முடி அலங்காரங்களைத் தவிர, யாராவது ´எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி’னு ஒரு ஹேர் ஸ்டைலை ட்ரை பண்ணீங்கனா, கம்பியை கவுன்ட் பண்ண வேண்டியது வரும்’னு டெரரான அறிவிப்பும் வந்திருக்கு. இப்படி ஸ்ட்ரிக்டா உத்தரவு போட்டது ஏதோ 80 வயதான தாத்தா அதிபர் அல்ல, கிம் ஜோங்உன் என்ற இளம் அதிபர்.
அணு ஆயுத சோதனைகள் மூலம், அமெரிக்கா மாதிரியான ஐரோப்பா அண்ணாத்தே நாடுகளை அலறவைத்த கிம், இப்போது உள்ளூர் இளசுகளை எகிறவைத்திருக்கிறார்.
28 விதமான ஹேர் ஸ்டைல்களில் 18 ஸ்டைல் பொண்ணுங்களுக்கு. பத்தே பத்து ஸ்டைல்கள்தான் ஆண்களுக்கு. விருப்பப்பட்டால் பெண்கள் நீண்ட சுருள் முடி,பின்னல் போன்று அவர்கள் விரும்பும் புதிய அலங்காரங்களையும் செய்துகொள்ளலாம். ஆனால், பசங்க ஸ்பைக், குயிப் போன்ற எந்தவொரு நியூ டிரெண்ட் ஹேர்ஸ்டைலையும் வைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல்,ஆண்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக முடி வெட்டிக்கொள்ள வேண்டும். அதுவும், முடியின் நீளம் 5 செ.மீ-தான் இருக்கணும். ஆனால், ராணுவ வீரர்களுக்கு 7 செ.மீ வரை முடி வைத்துக்கொள்ள அனுமதி உண்டு.
´எப்பவுமே சட்டி கவுத்த தலை மாதிரிதான், தன் நாட்டு ஆண்களோட தலை இருக்கணும்’என்று ஆசைப்படும் அதிபர், அதை ஃபாலோ செய்கிறாரா என்றால், அதுதான் இல்லை. மிஸ்டர் அதிபர் சார், எல்லா நாட்டு அரசாங்கங்களும் மக்களோட கேரைப் பத்திக் கவலைப்பட்டா, நீங்க ஹேரைப் பத்திக் கவலைப்படறீங்களே?
news thamilan thanks
No comments:
Post a Comment