இந்தோனேசியாவில் புலிகளிடம் இருந்து தப்பிக்க 5 பேர் 3 நாட்களை மரத்திலேயே கழித்துள்ளனர். இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் சிம்பங்க் கிரியைச் சேர்ந்த 6 பேர் குனுங் லூசர் தேசிய பூங்காவில் உள்ள அடர்ந்த காடுகளுக்குள் நுழைந்தனர். அவர்கள் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த மரக்கட்டைகளை பொறுக்க காட்டுக்குள் சென்றனர்
. அப்போது அவர்கள் எதிர்பாராதவிதமாக ஒரு புலிக்குட்டியை கொன்றுவிட்டனர். இதை பார்த்த புலிகள் ஆவேசமடைந்து அவர்களை தாக்க வந்ததுள்ளன. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மீதமுள்ள 5 பேரும் ஒரு பெரிய மரத்தின் மேல் ஏறி தப்பித்துள்ளனர்.
அவர்கள் தங்கள் கையடக்கத்தொலைபேசி மூலம் தங்களை காப்பாற்றுமாறு தகவல் அனுப்பினர். இதையடுத்து கடந்த சனிக்கிழமை சுமார் 30 பேர் அவர்களை காப்பாற்ற காட்டுக்குள் சென்றனர். அவர்களால் 4 புலிகளை மட்டுமே விரட்ட முடிந்தது. ஆனால் அவர் இருக்கும் பகுதியை மீட்பு படையினர் அடையவே 2 முதல் 3 நாட்கள் ஆகும். அவர்கள் செல்லும்வரையில் அந்த மரத்திற்கு கீழ் புலிகள் இருந்தால் அவற்றுக்கு மயக்க ஊசி போட்டு தான் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்
puthiyaulakam thanks
No comments:
Post a Comment