புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானால் சிபிஐ இயக்குனரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
சிபிஐ-க்கு தன்னாட்சி அளிப்பது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் பேரில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிபிஐ இயக்குனரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது.
41 பக்கங்களைக் கொண்ட அந்த பிரமாணப் பத்திரத்தில், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி அடங்கிய குழு சிபிஐ இயக்குனரை நியமிக்கும் என்றும், சிபிஐ இயக்குனரை நியமிக்கும் குழுவின் தலைவராக பிரதமர் இருப்பார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அமைச்சரவைக் குழுவின் பரிந்துரைப்படி இந்த பிரமாணப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
news.vikatan thanks
No comments:
Post a Comment