அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Wednesday, 3 July 2013

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மீண்டும் கைதானார் ஜெ. குரு


-
ஜூலை 04, 2013  at   6:44:59 AM
 
பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெ. குருவை மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

குரு உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 20 பேர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் ரத்து செய்தது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னிய சங்க சித்திரை முழுநிலவு மாநாட்டில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியது, வன்முறையை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் அவரை மீண்டும் கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்று மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மீண்டும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு குரு சிறை வைக்கப்பட்டுள்ள புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவில் அவதூறாக பேசியதாக ஏற்கனவே குரு கைது செய்யப்பட்டுள்ளார். 
தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் குரு மீண்டும் கைது செய்யப்பட்டதற்கு அந்த கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment