கனடாவின் ஒண்டோரியாவை சூறையாடியது காற்று: மக்கள் மின்சாரமின்றி தவிப்பு
[ திங்கட்கிழமை, 22 யூலை 2013,
கனடா ஒண்டோரியாவின் கிழக்கு பகுதி மற்றும் கியூபெக் போன்ற பகுதிகளில் சுமார் 70,000 வரையானவர்கள் மின்சாரத்தை இழந்த நிலையில் இருக்கின்றனர்.
மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றினால் மரங்கள் முறிந்தவிழுந்தன.
இதனால் மின்கம்பங்கள் பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் நேற்று முன்தினம் முதல் மின்துண்டிக்கப்பட்டுள்ளது.
இதில் கியூபெக் மாகாணத்தில் 56,000 வரையான வீடுகளுக்கு மின் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், ஒண்டோரியா பகுதியில் மின்சாரத்தை இழந்தவர்களில் 90 சதவீதமானவர்களுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஒண்டோரியாவின் புறநகர்ப் பகுதியில் நகராட்சி ஊழியர் ஒருவர் மரம் முறிந்து விழுந்ததனால் உயிரிழந்துள்ளதுடன், கியூபெக்கில் 10 வரையானவர்கள் காயமடைந்துள்ளனர்.
No comments:
Post a Comment