அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Monday, 22 July 2013

செக்ஸ் தொந்தரவால் ஓடும் ரயிலிலிருந்து குதித்த பெண் எஞ்ஜினியர்

[ திங்கட்கிழமை, 22 யூலை 2013, 
பாலியல் தொந்தரவு காரணமாக ஓடும் ரயிலில் இருந்து பெண் எஞ்ஜினியர் ஒருவர் குதித்து படுகாயமடைந்துள்ளார்.
பாலி மற்றும் பெலூர் ஸ்டேசன் இடையே ஓடும் ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 வயது பெண்ணொருவர் பயணம் செய்துள்ளார்.
கொல்காத்தாவில் இருந்து 42 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பான்டெல் ஸ்டேசன் வந்த போது அவர் பயணம் செய்த பெட்டி காலியான போது அடையாளம் தெரியாத நபரொருவர் அந்தப் பெட்டியில் ஏறியுள்ளார்.
தொடக்கம் முதலே அந்தப் பெண்ணை சீண்டியபடியும், அருவெறுப்பான பேச்சு பேசிய அந்த நபர், ஒருமணி நேரம் அந்தப் பெண்ணை டார்ச்சர் செய்துள்ளார்.
இதனால் வெறுத்துப் போன அந்தப் பெண் அவனிடமிருந்து தப்பிக்க ஓடும் ரயிலிலிருந்து குதித்துள்ளார். இதில் அந்தப் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தது பாலி ஸ்டேசன் அருகில் என்பதால் உடனடியாக அப்பெண்ணை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
அந்தப் பெண் கொல்கத்தாவில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் எஞ்ஜினியராக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் பாலியல் தொந்தரவு செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

newindianews thanks

No comments:

Post a Comment