March 16,
2013 08:35 am
பிரேசில் நாட்டில் குட்டி விமானம் விழுந்து
விபத்துக்குள்ளானதில் 10
பேர் உயிரிழந்தனர். பிரேசில் நாட்டின் பாரா மாகாணத்தில் அமேசான் நதியில்
நீர்மின் நிலையத்தை ஒரு தனியார் நிறுவனம் அமைத்து வருகிறது.
இந்த
நிறுவனத்தின் 9
அதிகாரிகள் நீர்மின் நிலையப் பகுதிக்குச் செல்வதற்காக குட்டி விமானம்
ஒன்றில் புறப்பட்டனர். அந்த விமானம் மான்டி டௌரடோ பகுதியில் காணாமல்
போய்விட்டது.
இந்நிலையில், மீட்புப் படையியினர் நடத்திய தேடுதல் வேட்டையில்
அந்த விமானத்தின் சிதிலமடைந்த பகுதிகள் அப்பகுதியில்
கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் விமானம் விபத்துக்குள்ளாகி நொறுங்கி விழுந்தது
உறுதிசெய்யப்பட்டது.
அதில்
பயணித்த 9 ஊழியர்களும், பைலட்டும் உயிரிழந்து விட்டனர்.
thamilan thanks
No comments:
Post a Comment