பதிவு செய்த நாள் -
மே 14, 2013 at 12:07:39 PM
விருதுநகரில் தனியார் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 3-வது மாடி கட்டட பணிகள் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட கட்டட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று கான்கிரீட்டுக்கு போடப்பட்ட கம்புகளை பிரித்து எடுக்கும் வேலை நடைபெற்ற போது, பாரம் தாங்காமல் கான்கிரீட் கட்டடம் முழுமையாக சாய்ந்தது. இதில் கீழே நின்று வேலைபார்த்துக்கொண்டிருந்த 7 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ளவர் விருதுநகர், குமாராபாளையத்தைச் சேர்ந்த மாணவன் மாரிச்செல்வம் ஆவார். இவர் விருதுநகரில் உள்ள மற்றொரு பள்ளியில் 10-ம் படித்து வருகிறார். இப்போது தேர்வுவிடுமுறையில், குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு வந்துள்ளார். அப்போது இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. மாணவனை மீட்டெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
காயமடைந்தர்வகள் சிகிக்சைக்காக விருதுநகர் அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேருக்கு லேசான காயேமே ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற 4 பேரும் பலத்த காயத்துடன் இருப்பதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
http://puthiyathalaimurai.tv thanks
No comments:
Post a Comment