அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Friday, 24 May 2013

கழுத்து வெட்டிக் கொலைசெய்யப்பட்ட பிரித்தானிய இராணுவ வீரர் இவர்தான்!


ON 24 MAY 2013.
நேற்று முன் தினம்(22) வூல் விச் பகுதியில் கழுத்து வெட்டிக் கொலைசெய்யப்பட்டவர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவர் ஒரு பிரித்தானிய இராணுவ வீரர் ஆவார். இராணுவ உடையில் அவர் முகாமுக்கு வெளியே நடந்துசென்றவேளை முதலில் ஒரு நபர் அவரை காரால் இடித்து வீழ்த்தியுள்ளார்.

கார் மோதுண்டதால் நிலத்தில் வீழ்ந்த இந்த இராணுவ வீரரை மற்றைய நபர் கத்தியால் கழுத்தில் வெட்டியுள்ளார். ரிகர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த இராணுவ வீரர், ஒரு பிள்ளையின் தந்தையாவார். 25 வயதாகும் இவர் அக்பானிஸ்தானில் கடமையாற்றியவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இன் நிலையிலேயே இவர் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகள் இருவரும் நினைத்திருந்தால் தப்பிச் சென்றிருக்கலாம்.



ஆனால் அவர்கள் இருவரும் பொலிசார் வரும்வரை அங்கேயே நின்றுள்ளார்கள். இறுதியில் பொலிசார் அவர்கள் இருவரையும் சுட்டு, கைதுசெய்துள்ளார்கள். இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்களில் ஒருவர் சமீபத்தில் சோமாலியா சென்று, அங்குள்ள முஸ்லீம் தீவிரவாத அமைப்புடன் பேசியுள்ளார். இதனை பிரித்தானிய உளவுத்துறையான எம்.ஐ 6 உறுதிசெய்துள்ளது.



எம்.ஐ 6 தகவலின் படி அவர்கள் சுமார் 2,000 பேரை பிரித்தானியாவில் கண்காணித்து வருகிறார்களாம். அவர்களில் இன் நபரும் ஒருவர் ஆவார். கொலையாளி இராணுவ வீரரை கொலைசெய்துவிட்டு, அங்கே சென்றுகொண்டு இருந்த நபர் ஒருவரிடம் தான் சொல்வதை வீடியோ எடுக்குமாறு கோரியுள்ளார். அவரும் அதனை வீடியோ எடுத்துள்ளார். இதனை முதன் முதலாக ஐ.ரிவி வெளியிட்டுள்ளது.


News : Source

eutamilar thanks

No comments:

Post a Comment