By ராமநாதபுரம்
First Published : 14 June 2013 12:13 AM IST
ராமநாதபுரம் அருகேயுள்ள பெருங்குளம் கிராமத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு அமைப்பின் மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா தலைமை வகித்தார். செயலர் அன்வர்அலி, மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஜாஹிர் ஹூசேன், பொருளாளர் வாணி சித்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மருத்துவ அணி செயலர் ரியாஸ்கான் வரவேற்றார். ராமநாதபுரம் எம்.எல்.ஏ.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அதன் சாவியை பொதுமக்களிடம் வழங்கி, வாகனம் வாங்க நிதியுதவி அளித்த சோலைக்கிளி குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவித்தார். விழாவில் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். மண்டபம் ஒன்றியத் தலைவர் ரசூல்கான் நன்றி கூறினார்.
dinamani thanks
No comments:
Post a Comment