நர்ஸரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளி சங்கம் வலியுறுத்தல்
ராமநாதபுரம், : நர்ஸரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் சங்கம், மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள வேண்டுகோள்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி, புதுமடம், பனைக்குளம், அழகன்குளம், பெருங்குளம், பெரியபட்டணம், மண்டபம் போன்ற பகுதிளை உள்ளடக்கிய பள்ளிகள் அனைத்தி லும் வெள்ளி, சனி விடுமுறை என்பதை மாற்றி சனி, ஞாயிறு விடுமுறை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும் சில பள்ளிகள் மட்டும் வெள்ளி, சனி விடுமுறை என இயங்கி வருகிறது.
இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், ஆசிரியைகள் தாங்கள் எதிர்கொள்ளும் தகுதித் தேர் விற்கு சனி, ஞாயிறுகளில் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெற இயலவில்லை. குறிப்புகள் எடுப்பதற்கு நூலகம் செல்வதிலும் பிரச்னை உள்ளது. நூலகங்கள் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை விடுமுறையாக இருப்பதால் அந்நாட்களை பயன்படுத்தமுடியாத நிலை உள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வை கருதி வெள்ளி, சனி விடுமுறையை சனி, ஞாயிறு என மாற்றி அறிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
news dinakaran thanks
No comments:
Post a Comment