அஸ்ஸலாமுஅலைக்கும்.♥தமிழ்உறவுகளேதமிழ்நம்அடையாளம்என்பதைஉணர்வோம்நம்துறைசார்ந்தசெய்திகளைநுட்பங்களைதமிழிலேயேபதிவுசெய்வோம்இளம்பதிவர்களைவரவேற்போம்தொடர்ந்துஎழுதுபவர்களைப்பாராட்டுவோம்என்னும்சிந்தனைகளைத்தங்கள்முன்இன்றுவைக்கிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.♥தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!! பிரியமுடன்... ♥PUDUVALASAI.NET˙♥ ♥வருக பிரியமுடன் உறவுகளே;;என் நன்றிகள் .பதிவர்கள் அனைவருக்கும் ,உங்கள் ஒத்துழைப்புக்கு என் நன்றிகள்<> தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்..

WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAI NEWS..News...<<<>>>>>

Tuesday 24 May 2022

பொதுப்பாதை தொடர்பான பொதுநலன் சார்ந்த கோரிக்கை பதிவு*

*பொதுப்பாதை தொடர்பான பொதுநலன் சார்ந்த கோரிக்கை பதிவு*

நமதூரில் நீண்ட நெடுங்காலமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த பாதைகளின் இடங்கள் தற்போது அந்த இடத்தின் உரிமையாளர்களால் பட்டா நிலம் என்று முழுமையாக அடைக்கப்பட்டு வருகிறது. இதனால் நாம் முன்பு பொதுவாக  பயன்படுத்தி வந்த பாதைகளின் இடங்கள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்கள் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி எளிதாக செல்லவேண்டிய இடங்களுக்கு கூட மேலும் பல தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. 

நில உரிமையாளர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்..... நிச்சயமாக அந்த இடங்கள் உங்களின் பட்டா இடமாகவே இருக்கட்டும் மேலும் அதை   அடைப்பதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உண்டு என்றாலும், மக்கள் நலன், பொது நலன் மற்றும் எதிர்கால நலன் கருதி தயவுசெய்து பொதுப்பாதைக்கும் வழிவிட்டு அடைத்துக்கொள்ளுங்கள். இந்த உலக வாழ்க்கை என்பது நிரந்தரமில்லாத நிலையற்ற  வாழ்க்கையாகும், மறுமை நாளே நிரந்தரமான வாழ்க்கை இதை கருத்தில்கொண்டு அல்லாஹ்வின் அருளை நாடி நற்காரியங்களை செய்து கொள்ளுங்கள் அல்லாஹ் உங்களுக்கு நன்மை செய்வான் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

இது தொடர்பாக ஊராட்சி மன்றமும், முஸ்லிம் தர்ம பரிபாலன சபை ஜமாஅத்தார்களும் *தானாக முன்வந்து* இது தொடர்பான நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கருத்தொற்றுமை ஏற்படுத்தி நல்லது நடக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் இதேபோல் மற்ற நில உரிமையாளர்களும் அவரவர்கள் நிலத்தை அடைக்கும்போது இது பட்டா இடம் என்று சொல்லி இதே போன்று செய்ய ஆரம்பித்துவிட்டால் பொதுப்பாதை என்பது இல்லாமல்போய்விடும். அதனால் இந்த விசயத்தை எளிதில் கடந்து செல்லாமல் இதை ஒழுங்குபடுத்தி இனி வரும் காலங்களில் இது போன்றதை நன்மையாக அமைந்திடுமாறு ஊர் மக்கள் நலன் சார்ந்து கேட்டுக்கொள்கின்றேன்.

Sunday 1 May 2022

கிராம சபை கூட்டம் புதுவலசை

நேற்று (01/05/2022) நமதூரில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் முக்கிய தீர்மானமாக மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டங்கள் ஆய்வு செய்வதை தடை செய்ய வேண்டி ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்து கடற்கரையில் குடிசை ஆக்கிரமிப்பு செய்து இருப்பதை அகற்ற அந்த துறை தொடர்பான அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுபோல் இன்னும் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மிக முக்கிய அம்சமான தீர்மானமான மீத்தேன் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு மக்கள் மூலம் வலுவான எதிர் தீர்மானம் இயற்றி அது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அது அதிகாரிகளின் கவன ஈர்ப்பு தீர்மானமாக இருக்கும். குறைந்தபட்ச நபர்களை மட்டும் வைத்து தீர்மானம் நிறைவேற்றும் போது அது அரசு துறையில் எடுபடாமல் போக வாய்ப்புண்டு. கிராம சபை என்பது வலுவான அமைப்பாகும். அதன் தீர்மானம் என்பது வலுவானதாகும். இது மக்களாட்சியில் மக்களுக்கு கிடைத்திருக்கும் சுதந்திரம். ஆனால் நேற்று நடந்த கிராமசபை கூட்டத்தில் போதுமான இளைஞர்களும் பெரியவர்களும் போதுமான அளவிற்கு வரவேயில்லை. இதற்கு நம் மக்களின் அக்கரையின்மையா அல்லது அவரவரின் வேலைப்பளுவா அல்லது இதற்கு போய் என்ன ஆகப்போகுது என்ற சிந்தனையா?தெரியவில்லை. 

மீத்தேன் போன்ற திட்டத்தை வலுவிழக்க போதுமான எதிர்ப்பை கையெழுத்து மூலம் அரசுக்கு தெரியவைக்க வேண்டும் இது நமக்கு காலத்தின் கடமை. அதனால் இனி வரும் காலங்களின் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதை தனிமனித ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும்.

மேலும் ஆசணி குடியிருப்பு பகுதியின் வளைவில் மின் கம்பம் அகற்ற வேண்டி அந்தப் பகுதி மக்களும் நானும் பல முறை ஊராட்சி மன்ற கவனத்திற்கு தெரியப்படுத்தியிருந்தோம். இது தொடர்பாக அவரிடம் கேட்கும் போது, அந்த கம்பத்தை அகற்றுவதற்கு ஊராட்சி மன்றத்தின் மூலம் மின் வாரியத்திற்கு பணம் செலுத்தப்பட்டுவிட்டது ஆனால் மின்வாரியத்தில் இருந்து அகற்றுவது தொடர்பாக ஆர்டர் ஆகி வரவில்லை என்ற தகவலை ஊராட்சி மன்ற தலைவர் பதிவு செய்தார்.


சஹாப் அப்பாக்குட்டி